மகாத்மாவை நினைப்போம்

மகாத்மாவை நினைப்போம்

வட்ட கண்ணாடிக்கு பின் வலிமையான கண்களடா
வாய்மையே வெல்லும் என்று உரைத்த வாய்களடா
வழங்கிய அடிகளை அகிம்சையால் வென்றவரடா
வளைந்த தடியும் கதர் ஆடை ராட்டினமும் வைத்தவரடா
வந்தே மாதரம் என்று கூறி எழுச்சியை செய்தவரடா
வர்த்தகம் செய்ய வந்து நாட்டை பிடித்தவரை விரட்ட
வெள்ளையனே வெளியேறு எனக் கோஷமிட்டு மிரட்ட
அடிபணிந்து அவனும் வெளியேறிட சுதந்திரம் பெற்று தந்து
நம்மையெல்லாம் நம்மை நாமே அரசாள வைத்து இம்மண்ணில்
புகழோடு வாழ வழி செய்த அந்த மகானை இன்னாளில்
நினைவு கூர்ந்து நெஞ்சில் இருத்தி நன்றியை நவில்வோம்

எழுதியவர் : கே என் ராம் (30-Jan-24, 1:16 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 22

மேலே