என்கடன் பணிசெய்து கிடப்பதே
'உனக்கே என்று அமைந்த உன்பணியில்'
அனுதினமும் 'முழுமூச்சுடன் பணி செய்திடு'
இதை ஒரு 'வேள்வி' என்றே எண்ணிடு
வேள்வியின் 'அவிசே' உன்பணி
அது உன்னைப் 'படைத்தவனுக்கே' என்றே
'அர்ப்பணி ' அவன் உனக்கு காவலன்
உன்தேவை எல்லாம் அறிந்தவன்....
கண்ணன் கூறும் 'கீதையின் சாரம் இது