இறைவனிடம் வேண்டுகிறேன்
இறைவனிடம் வேண்டுகிறேன்
இளமைக்கு தனிமை இனிமை /
முதுமைக்கு தனிமை வெறுமை/
அறுபதிலும் காதல் வரும்/
மனையாளிடம் மட்டுமே வரும்/
காலம் சென்ற பின்னும்/
அன்பு வென்று நிற்கும்/
நூறு ஆண்டுகள் வாழ வேண்டி
ஆலய மணிதனை நீ அடி/
எட்டாத உயரத்தில் இருந்தாலும்/
தோள் கொடுத்த உனக்கு /
தோள் தருகிறேன் என்னவளே/
மறு பிறவி எடுத்தாலும்/
மனைவிக்கு நான்தான் துணை/
மனசெல்லாம் தினமும் அவள் நினைவில்/
இன்பமாக வாழ்ந்தாலும் அவளோடுதான் /
துன்பமாக இறந்தால் அவளோடுதான்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

