பட்ட கடனுக்காக தேயுது மூச்சி

மணமகளுக்கு
தாலியும் ஒரு வேலி/
மாலையிடுபவனுக்கு
என்ன உண்டு தோழி/

பெண் வீட்டாரிடம்
வரதட்சணை கோடி/
பொறுத்துப் பார்த்தால்
மாப்பிளை தெருக்கோடி /

மெட்டியிட்டு திலகமிட்டு
ஒட்டிக் கொண்டவனுக்கோ /
கட்டில் மேலே
பூமெத்தையிலே உறக்கம் /

மகளைப் பெற்றவருக்கோ
கட்டாந்தரையே சொர்க்கம்/
ஊரைக் கூட்டி
விருந்து போட்டாச்சு /

பட்ட கடனுக்காக தேயுது மூச்சி/
தாரை வார்த்த
தாயாருக்கு கண்ணீராச்சு/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (7-Jun-24, 6:56 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 19

மேலே