காவல் நீதானே

துடிக்கும் இதயத்திற்கு
தூண்டில் இட்டவனே/
துள்ளும் பருவத்திலே
துணையாக வருபவனே/
தூண்டு கோலாக
தூது விட்டவனே /
துளித்துளியாய் காதலை
துணிந்தே தெளித்தவனே/
தூவானமாய் மோகத்தை
தூறலாக்கிப் பார்த்தவனே /
தூரிகை வாழ்க்கைக்கு
காவலன் நீதானே/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (7-Jun-24, 7:01 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 78

மேலே