நீயே என் உலகமடா

நோக்கும் வேளையில் முகம்
சுழிக்கிறாய்/
தேடி வந்தால் பேச்சைக்
குறைக்கிறாய்/

சாடிக்குள் மலராக வாடிக்
கிடக்கிறேன் /
கேடியின் நெஞ்சத்தை நாடி
நிக்கிறேன் /

ஏனோ என்னை நெரிந்தியாய்ப்
பார்க்கிறாய் /
தானே நானும் வருந்தியே
துடிக்கிறேன் /

நோகும் உள்ளத்திற்கு மருந்தாய்
வருவாயோ/
காவு கொள்ளும் நோயாய்
மாறுவாயோ/

மறந்து வாழ்ந்திடும் வாழ்வு
சாத்தியமில்லையடா/
சத்தியமாய் நீயே என்
உலகமடா/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (8-Jun-24, 8:45 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 97

மேலே