முருகன் அருள் பெறுவோம்
முருகன் அருள் பெறுவோம்
அழகின் வடிவமே அபயம் அருளுபவனே போற்றி
ஆறுபடை வீடு அமர்ந்து ஆறுதல் தருவாய் போற்றி
இருள் நீக்கி ஞான ஒளி தந்தருள்வாய் போற்றி
ஈசன் பொறியில் அவதரித்த இனியனே போற்றி
உள்ளம் உருகி வேண்டிட வரம் அளிப்பாய் போற்றி
ஊமைக்குத் தயை புரிந்த இறைவனே போற்றி
எம்மை காத்து நல்வழி காட்டிடுவாய் போற்றி
ஏற்றத்தால் வரும் அகந்தையை அழித்திடுவாய் போற்றி
ஐயம் நீக்கி அறமோடு வாழ வழி செய்திடுவாய் போற்றி
ஒருமை மனதுடன் உன்னைத் தொழுகின்றோம் போற்றி
ஓங்காரத்தைத் தந்தைக்கு விளக்கியவனே போற்றி
ஒளவைக்கு அருள் செய்த தமிழ் தெய்வமே போற்றி
ஆவணியில் தினமும் முருகனை வணங்கி அருள்
பெற்று இன்னல் களைவோம்