கருங்கூந்தல் கலைந்தாடும் பூவண்ண எழில்சோலை

கருங்கூந்தல் கலைந்தாடும் பூவண்ண எழில்சோலை
இருவிழிகள் இணைந்தோடும் இருநீலக் கவின்கயல்கள்
அருவிதந்த அழகோஉன் ஆனந்தப் புன்சிரிப்பு
வருகையிலே வரவேற்கும் வசந்தயிளம் பூங்காற்று

----ஒரே எதுகை காய் காய் காய் காய் எனும்
அடிதோறும் ஒரே வாய்ப்பாடு அமைந்து வந்த கலிவிருத்தம்

வேறு கோணத்தில் பார்க்கின்
காய் முன் நிரை வரும் கலித்தளை மிகுந்து மாச்சீர் வராத
அளவடிகளால் அமைந்த தரவு கொச்சகக் கலிப்பா ஆகும்

கலிப்பாவின் ஒரு பாவினம் கலிவிருத்தம்
கலிப்பாவின் ஒருவகை தரவு கொச்சகக் கலிப்பா

ஒரு பாவினமும் ஒரு பாவும் ஒரே கவிதையில் இணைந்து அழகு தருவது
இக்கவிதையின் சிறப்பு

எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-24, 9:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே