எங்க ஊரு விநாயகரு
எங்க ஊரு குளத்தங்கரை ஓரத்தில்
ஒரு அரச மரம் கிளியும் குயிலும்
கொஞ்சிக் குலாவும் பெரிய மரம்
மரத்தடியில் வந்தமர்ந்தார் தொந்தி விநாயகரு
கருமாணிக்கமாய் கருங்கல்லில் வடித்த தெய்வம் அவரு
எப்போது அங்கு வந்தார் என்று எங்கள் ஊராரைக் கேட்டு பாருங்க
அவங்க சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று ' தாத்தா காலத்திற்கும்
முந்து இங்கு வந்து எம்மை ஆளும் சுயம்பு இந்த
எங்கள் செல்லப் பிள்ளை செல்வகணபதி'
யாரோ என்றோ எப்போதோ ஒரு சிறு
கோயில் கட்டி அண்ணலுக்கு நித்திய பூஜைக்கென்று
மானியமும் எழுதிவைக்க ......நல்லபடி
எங்கள் தொந்தி கணபதிக்கு நித்தமும்
நெய் விளக்கு தீபம் உண்டு தேங்காய் வெல்லமும்
வாழைப்பழமும் உண்டு..... சங்கடஹர சதுர்த்தி வந்தால்
எங்கள் ஊரே அங்கு ஒன்றாய்த் திரண்டு வந்து
மனத்தால் நினைத்து துதித்து சிலர்
மெய்சிலிர்க்க விநாயகர் அகவலும் பாடிடுவார்
வேண்டும் வரம் எல்லாம் வாரி வாரி வழங்கும்
வள்ளல் கடவுள் எங்கள் ஊரு விநாயகரு
எருக்கன் பூ மாலையும் கடலைச் சுண்டலும்
மோதகமும் அவளும் பொரியும் போதுமே
எங்கள் வள்ளல் கணபதிக்கு தாயுமாய் தந்தையுமாய்
எம்மைக் காத்திடும் எளியோருக்கு போற்றி கும்பிடும்
பொது மக்கள் கடவுள் தான்றோனி அப்பன்