நூலின் பெயர் இரா இரவியின் ஹைக்கூ உலகம் நூலாசிரியர் பொன் குமார் நூல் மதிப்புரை கவிதாயினி ஆ குமாரிலட்சுமிமதுரை

நூலின் பெயர் : இரா. இரவியின் ஹைக்கூ உலகம் !

நூலாசிரியர் : பொன். குமார் !

நூல் மதிப்புரை கவிதாயினி ஆ. குமாரிலட்சுமி.மதுரை .

வெளியீடு :வானதி பதிப்பகம் ..23.தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17 தொலைபேசி044 24342810 / 24310769 பக்கங்கள் 118. விலை ரூபாய்110.

கனவுகள் விதைப்பதே கவிதை அதிலும் அவை உணர்வுகள் தொடும் வண்ணம் இருந்து விட்டால்?
அருகில் அமர்த்தி ஆயிரம் அறிவுரைகள் கூறுவதை விட
சட்டென கன்னத்தில் அறைந்து சாட்டையை
சொடுக்கி உண்மையை உணர்த்துவதாக அமைந்தால்?
அந்த கவிதையின் மதிப்பே சிறப்பு தான்.
30 வார்த்தைகளில் முழுவதும் சொல்வதற்கு பதிலாக மூன்றே வரிகளில் அதன் கருவை, உயிரை நம் இதயம் கொடுத்து விட்டால், அதுவல்லவோ வெற்றி பெற்ற கவிதை
வரிக்கு வரி சபாஷ் போட வைக்கும் வார்த்தை ஜாலங்களுடன் சொல்ல வந்த விஷயத்தை அடித்து சொல்வது கவிஞர் இரவி அவர்களின் தனித்திறமை.
ஹைக்கூ கவிவானில் இந்த
இரவியின் ஒளியிலே தான் எம் போன்றவர்கள் ஹைக்கூ விற்கான இலக்கணத்தை கற்றுக்கொள்ள துவங்கினோம்.இந்த கவிதைகளை எல்லாம் ஒன்றாகக் கோர்த்து அவற்றின் சிறப்புகளை தொகுத்து கவிஞர் இரவி அவர்களின் சிரசுக்கு மலர் கிரீடமாய் சூட்டியுள்ளார் *கவிஞர்* *பொன்குமார்* அவர்கள்.
இவர் பழகுதற்கு இனியவர்.
சேலத்து மாம்பழம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பண்பாளர் நூல்களை சேமித்து வைத்திருக்கும் ஆவண காப்பகம்.
புத்தகத் திருவிழாக்களில் உள்ள புத்தக பூக்களை எல்லாம் தேடி விரும்பிச் செல்லும் தும்பி.
நல்ல நூல் விமர்சகர். தன் ஹைக்கூக்களால்
பரபரப்பாய் பேசப்படும் பெரும் படைப்பாளி.
திரு இரவி அவர்களை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் ஹைக்கூவின் வரலாற்றினை எழுதிவிட முடியாது, என்ற வாழ்த்தினை முன்வைத்து, அருமையாக தனது துவக்கத்தை கொடுத்துள்ளார்.
இந்நூலிலே வெகு
எதார்த்தமாக விமர்சனங்களை பதிவு செய்திருப்பதோடு அவரோடு ஹைக்கூ குறித்த நேர்காணலையும்
வழங்கியுள்ளார் திரு பொன் குமார் அவர்கள்.
கவிஞர் இரவி அவர்களின் ஹைக்கூ விமர்சனத்திற்கு கூட இவர் விமர்சனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் இரவி அவர்களின் இரண்டாவது நூலான முதல் ஹைக்கூ தொகுப்பினைத் தொடர்ந்து திரு. இரவி அவர்கள் ஹைக்கூ மழையாய் பொழிந்து இருக்கிறார்.....
என விமர்சித்து இருக்கும் கவிஞர் பொன் குமார் அவர்கள் இரவி அவர்களின் முதல் கவிதை தொகுப்பில் இருந்து
*அஞ்சல் பெட்டி*
*அபஸ்வரம் பாடும்*
*மாதக்கடைசி*
என்கின்ற இந்த கவிதையை சுட்டிக் காட்டி இந்த மூன்று வரிகள், விளக்க முடியாத அந்த குடும்பத்தின் வறுமை நிலையினை எவ்வளவு தெளிவாக நமக்கு விளக்கி விட்டது என்பதை மிகவும் அழகாக கோடிட்டு காண்பித்து இருக்கிறார்.
*குழந்தை அழுகிறது*
*குடிக்காத பாம்பிற்காய்*
*புற்றில் பால் ...*
என மூட பழக்கங்களுக்குள் இன்றளவும் மூழ்கி போய் இருக்கின்ற மக்களைச் சாடும் கவிஞர் அவர்களின் கவிதை தரத்தை அழகாக எடுத்துக்காட்டும் திரு பொன் குமார் அவர்களின் விமர்சனங்கள் போற்றுதற்குரியது.
*தடுக்கி விழுந்ததும்*
*தமிழ் பேசினான்*
*அம்மா*
என்ற கவிதையில் ஆங்கில மோகம் கொண்டவர்களுக்கான சவுக்கடி என்று கோடிட்டு இரவியின் கவிதை திரத்தை கோடிட்டு காட்டியுள்ளார்.
உள்ளத்தில் ஹைக்கூ கவிதை தொகுப்பில் ஒரு அழகான கவிதை
*எல்லோரும்* *மகிழ்வாய்*
*திருமண வீட்டில்* *தந்தை கடன்* *வலையில்*
வரிகள் மூன்றாக இருந்தாலும் அதன் வலி மிகவும் பயங்கரமாக இருப்பதை அழகாக சுட்டிக்காட்டி இருக்கிறார் கவிஞர் என்பதை பொன் குமார் அவர்கள் விளக்கி உள்ள விதம் சிறப்பு. கல்யாணம் என்றாலே கடன் வாங்கி தான் செய்ய வேண்டும், இது பெண்ணின் அப்பாவிற்கு மட்டுமல்ல மாப்பிள்ளையின் அப்பாவிற்கும் பொருந்தும் என்று இவர் சொல்லி இருக்கும் விதம் மிகவும் அருமை.
கவிஞர் இரவியின் நெஞ்சத்தில் ஹைக்கூ கவிதை தொகுப்பில் ஒரு கவிதை
*அப்பா வலக்கை* *அம்மா இடக்கை* **மனைவி*
**இதயம்* .
இதயமில்லாமல் இயங்க முடியுமா மனைவிக்கு கவிஞர் எவ்வளவு பெரிய இடத்தினை கொடுத்து இருக்கிறார், எவ்வளவு மரியாதைையுடன் மனைவியை குறிப்பிடுகிறார் என மறக்காமல் இந்த கவிதையை சுட்டிக்காட்டி உள்ளது நமக்கெல்லாம் வியப்பாகவே உள்ளது.
மற்றொரு கவிதையிலும் *மாதா பிதா குரு* *மூன்றும் ஒரே வடிவில்*
*மனைவி*
என்று மனைவிக்கான தனது அங்கீகாரத்தை கவிஞர் வழங்கியிருப்பதையும் சிறப்பாக சுட்டி காட்டியுள்ளார் கவிஞர். பொன்
குமார் அவர்கள்.
கவிஞர் ஆத்மார்த்தி
அவர்கள் தொகுத்துக் கொடுத்த உதிரா பூக்கள் கவிதை தொகுப்பில் இருந்தும் அழகான ஒரு சில கவிதைகளை படம்பிடித்து காட்டியிருக்கும் பொன் குமார் ஐயா அவர்கள் கவிஞர் ஆத்மார்த்தியவர்கள் நமது இரவி ஐயா அவர்களுடைய கவிதையிலிருந்து வெகு நேர்த்தியாக கவிதைகளை தெரிவு செய்து கொடுத்திருக்கும் விதத்தினை வியந்து சிறப்பிக்கிறார்
*சுவரில் எழுதாதே* **என*
*சுவர் முழுவதும்** *எழுதி இருந்தது...*
என்கின்ற கவிதை கவிஞர் இரவி அவர்களின் தரமான ஹைக்கூ க்களுக்கு ஒரு இதமான அடையாளம்.....
இப்படியாக தொகுப்பின் நெடுகவும் கவிஞர்
இரவி அவர்களின் சிறப்பான கவிதைகளை தரமான விமர்சனங்களை எழுதி.... மேலும் அவரது கவிதை மீதான தன்னுடைய கருத்துக்களையும் வாதங்களையும் தெளிவுபடுத்தி... கவிஞர் இரவி ஹைக்கூக்களோடு எப்படிப்பட்ட தொடர்பில் இருக்கிறார் என்பதற்கு அவரை நேர்காணல் கண்டு அவருடைய கருத்துக்களையும் சிந்தனைகளையும் அப்படியே இங்கே படைத்து, மதுரையின் அடையாளம் ஹைக்கூ திலகம்
இரவி ஐயா அவர்களின் நூல்களுக்கு கவிஞர் பொன் குமார் ஐயா அவர்கள் அளித்துள்ள விமர்சனமான கவிஞர் இரவியின் ஹைக்கூ உலகம் என்கின்ற கவிதை தொகுப்பில்
கவிஞர் பொன் குமார் அவர்களின் விமர்சனங்கள் கவிஞர் ரவி அவர்களின் பெருமைக்கு மேலும் வளம் சேர்ப்பதாக அமைந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள நூலை படித்துப் பாருங்கள்.... அதன் சிறப்பை உங்கள் இதயம் நுகர்ந்து மகிழுங்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (16-Jun-25, 3:05 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 8

சிறந்த கட்டுரைகள்

மேலே