இடைவெளியின் தூரம்
கண்ணீரோ கன்னம் நனைக்க
வாழ்வின் நிஜங்களோ உயிர் நனைக்க
நெஞ்சமோ உன்னை நினைக்க
காத்திருந்து என் காலத்திற்கும் கால் வலிக்க
விழித்திருந்து என் நொடிகளுக்கும் இமை வலிக்க
மரணமும் என்னை மறந்து போக
ஜனனமும் உன்னை நினைத்து உருக
எப்போது தீருமோ அன்பே நம் இடைவெளியின் தூரம்