எனக்கும் உனக்கும் யார்?

கோடி முறை
கூப்பிட்டு இருப்பேன்
கூட வந்தது
என்னவோ
என் கால்கள்தான்,

என்
பசிக்கும்
பட்டினிக்கும்
பரிமாறியது
என்னவோ
என் கைகள்தான்,

என்
கவலைக்கும் கஷ்டத்திற்கும்
கண்ணீர் வடித்தது
என்னவோ
என் கண்கள்தான்.

எனக்கும் உனக்கும் யார்?

ச.நாகராஜன்
5 -71 அம்மன் கோவில் தெரு,
ரெட்டைகுளம்,
குலையநேரி(po)
வீரகேரளம்புதூர்(tk)
திருநெல்வேலி(Dist)

எழுதியவர் : ச.நாகராஜன் Samuthiram (16-Jan-12, 1:22 pm)
சேர்த்தது : S.Nagarajan
பார்வை : 518

மேலே