வானத்தை தொடுவோம் வா!

வாலிபா!
முகவரி இல்லாத வீடாய்
இருக்கிறாய் நீ!
மண்ணுக்குள் புதைந்த
சறுகாய் கிடக்கிறது
உன் மனம்!
எல்லையே இல்லாமல்
இருக்கிறது
வாழ்கையின் பாதை!
என்றாவது போய்
பார்த்து இருக்கியா!
முடியும் என்று
உன் உள்மனம்
சொன்னாலும் - நீ
உன் மூளைக்கு முக்காடு
போடுகிறாய்!
எவனோ ஒருவன்
படிக்காதவன் - அவன்
பணபசிக்கு இரையாகதே!
உன்னால் உருவான
ஒரு அம்பாணி போதும்!
நீ என்று சிகரத்தை தொட
போகிறாய்!
இயந்திரங்கள் உழைக்கும்
உலகத்தில் - இயந்திரமாய்
நீ உழைத்து பயன் என்ன?
உன் வலிமை தெரியவில்லை
உனக்கு!
வா வானத்தை தொடுவோம்!