மாற்றுத்திரனாளிகள்
தவறு செய்தவன் இறைவன்
தண்டனை ஏதும் இல்லையோ
குற்றம் புரிந்தவன் அவனே - ஆனால்
குறைகள் மட்டும் என்னுள்
குறையை எண்ணி குறைக்கவும் நேரமில்லை
குமுறி குமுறி அழுதும் பயனில்லை
தீட்டியவன் உறுப்பை ஊனப்படுத்தினாலும்
எங்கள் உள்ளம் ஊனமில்லை
பெயரளவில் கிடைத்த மாற்றம்
எங்கள் வாழ்வில் இல்லையே
முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாதது ஏதும் உண்டோ!