கண் தானம்

வாழ்கையில் ஒரு முறை
பார்க்க வேண்டும் வளர்பிறை தேய்பிறை ....
இரவும் பகலும் எப்படி தான் இருக்கும் என்ற ஏக்கம் ,
எப்பொதும் எங்கள் மனதில் இருக்கும் ....
உணர்வுகளை பிரித்து அறிந்திட தெரியும்,
நிறங்களை எங்களுக்கு யாரால் காட்டிட முடியும்...
நிலா வெள்ளை நிறம் என்று
பாட்டி சொன்னார்கள் ,
வெள்ளை எது என்று யார் சொல்வார்கள்
பார்வை அற்ற எங்களுக்கு ...
ஒளி கொடுங்களேன்
உங்கள் கண்களால்
ஒளியற்ற எங்கள் கண்களுக்கு ....
அன்ன தானம் அடுத்த வேளைக்குள்
பசித்து விடும் ...
உங்கள் கண் தானம் பல உயிர்களுக்கு
ஒளி தந்திட கூடும்...
மண்ணுக்குள் போகும் கண்களை கொடுத்து
வண்ணங்களை காட்டலாமே !!!!
நாங்கள் மண்ணுக்குள் போகும் முன் ....

எழுதியவர் : kiruthika (8-Feb-12, 9:42 pm)
Tanglish : kan thaanam
பார்வை : 313

மேலே