தூக்கம்
புல் தரையில் மீது பனித்துளி;
சில்லென வீசும் தென்றல் காற்று;
அதன் சொல் பேச்சு கேட்டு அசையும் மரங்கள்;
குயிலின் பாட்டு;
அணிலின் விளையாட்டு;
கூடுகளை விட்டு கூட்டமாய் பறக்கும் பறவைகள்;
மேகத்தை கிழித்து கொண்டு எழும் சூரியன்;
இவை எதையும் ரசிக்க விடாமல்
என்னை கட்டி இழுக்கிறது என் தூக்கம்!!!