ஒரு சிறப்புக் கருத்து ----கவின் சாரலன்
கவிதை இரண்டாம் கண்ணியில்
"அவர் ஊனுடன் உயிருடன் கலந்து
இறைவன் அங்கு நிற்கின்றான் "
கருத்துநன்று உழைப்பின் உயர்வை
சொல்லியிருகிறீர்கள்
வீட்டை தூய்மை படுத்தி தீபம்
ஏற்றி தினம் பாமாலை பாடுவது
பைத்தியகாரத் தனமா ? புரியவில்லையே . முதல் கண்ணியை
இப்படி அமைத்திருந்தால்
.......
ஊனக் கண்களால் விழித்து நோக்கினால்
இறைவன் தெரிய மாட்டான்
ஞானக் கண்களால் உள்ளேபார்
இறைவன் அங்கு இருகின்றான் "
ஒரு ஞானக் கவிதை ஆகி இருக்கும் .பக்த்தன் இறைவனை
பித்தா பிறை சூடி என்றுதான் போற்றுகிறான் அபிராமி பட்டர்
சொல்லுவார்
" முன் சொன்னவெல்லாம் தரும்
பித்தர் ஆவரென்றால் அபிராமி
சமயம் நன்றே "
ஆறாம் அறிவு அரை வேக்காடுகளின்
ஆனந்தக் கும்மியில் அகம் மகிழ்ந்து
போய் இறை நினைப்பை குறை கூறுதல்
அழகல்லவே அன்புக் கவி சினேகிதி
அமுதா அம்மு . நான் போற்றும்
கவிஞரின் கவிதை வரிகள் உங்களுக்காக
"பஞ்சை போட்டு நெருப்பை அணைப்பவன்
பைத்தியக்காரனடா
பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன்
பச்சை மடையனடா
நெஞ்சுக்கு நீதி உரைத்தே வாழ்பவன்
நிச்சயம் இறைவனடா
நல்ல நேர்மையிலும் உடல் வேர்வையிலும் தினம் வாழ்பவன்
மனிதனடா "
----அன்புடன்,கவின் சாரலன்
கவிக் குறிப்பு : கவி சினேகிதி அமுதா அம்முவின்
இறைவன் எங்கே இருக்கிறான் .....என்ற
கவிதைக்குத் தெரிவித்த கருத்து

