தோழியரே...தோழியரே!!

காலத்தின் கருவறையில்
கால்தடத்தைப் பதிக்க எண்ணும்
கவிஞைகளே(!?)..
நலமா, நீங்கள் நலமா!?

எந்தன் உணர்விற்குள் உறுத்தி நிற்கும்,
உங்கள் உள்ளம் துடைக்க சில கேள்வி!

எம் பண்பாட்டைக் காத்து நிற்க - இது
படை திரட்டும் ஒரு வேள்வி!

"பெண்மொழி" என்று சொல்லி - நீ
பெண்மையைப் படையல் வைப்பதா?

உன்மொழி படித்த பெண்ணே - உன்
எழுத்தைத் தள்ளி வைப்பதா?

காற்றினில் கலையும் மேகத்தை
காலத்தின் கருவறையில் ஏற்றி வைப்பதா?

இலக்கியத்தில் இடம்பிடிக்க - "பெண்மொழி"
இயல்பை நீ இழக்கலாமோ?

வரலாற்றைப் புரட்டிப் பார்...காந்தியோடு,
"கோட்சே"யும் இருப்பதுண்டு!

எழுதியவர் : (4-Sep-10, 7:15 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 449

மேலே