மறந்து விடாதே
நண்பா !
என்னை வெட்டாதே...
பூத்து குலுங்கும் - என்
புன்னகையை பார்.
விரிந்து நிற்கும் - என்
கிளைகளை பார்.
இலைகளின் மேல்
எத்தனையோ
எறும்பு கூட்டம்
பயணிக்கிறது.
கிளைகளின் மேல்
சின்ன குருவிகள்
சிரித்து விளையாடுகிறது!
காற்றாக உனக்கு
சுவாசம் தருகிறேன்.
காயத்துக்கு
மூலிகையாகிறேன்.
என்னை வெட்டியெறிந்து
மூச்சு விட
திணறப்போகிறாயா?
ஆயுள் காலம்
முடித்து விட்டு
செல்கிறேன்..
நானே மரம்......
நண்பா என்னை
வெட்டாதே!