ஊடலின் வெளிப்பாடு
அலைபாயுதே நினைவுகளில்
கலையாகுதே கர்ம வினைகளும்,
தெவிட்டாத் தேனமுதை
திகட்டத்திகட்ட ஊட்டிவிட்டு,
தெரியாத விளையாட்டினை
புரிந்து, தெரிந்தே விரும்பிநிற்கும்.
ஆழ்ந்த காமக்கடலின் கரைதனில்
காதலலைகளை ஆடவிட்டு,
மூழ்கி மூழ்கி முத்தெடுக்க
முயன்று முயன்று தோற்கிறாய்.
அமைதியாய் இருக்கச் சொல்கிறாய்.
வானத்தை வசமாக்கவும் முயல்கிறாய்.
வந்து முளைத்த வெள்ளியை
வடிவிழந்து மறைவே செய்கின்றாய்.
என்னவேண்டும் உனக்கு
தெளிவாகவே உரைத்துவிடு.