இது தான் காதலா?

காதலிக்கிறேன்!என்னை ஈரைந்து
மாதம் கருவில் சுமந்தவளை!
அதனால் தானோ அவளை
தண்டிக்கிறேன் சிறுவயது முதல்!
ஏனோ இதை அத்தனையும்
தாங்கிக் கொள்கிறாள்
இதற்காகவே பிறந்தவள் போல்!
புன்னகையை மட்டுமே ஏந்துகிறவள்
இன்று துயரத்தில் அமிழ்ந்துவிட்டாள் என்னால்!
இருந்தும் வாயெடுத்துப் பேசவில்லை
என் மனம் புன்னாகிவிடுமே என்று!
அந்த மௌனமே என்
நெஞ்சை கொன்றுவிட்டது
மறு ஜென்மம் எடுத்தவனைப்
போல் உணர்கிறேன்!
இம்முறை என் அன்னையை
நான் சுமக்கிறேன் என் நெஞ்சில்!

எழுதியவர் : tamizhmagal (4-Mar-12, 9:55 pm)
சேர்த்தது : tamizhmagal
பார்வை : 187

மேலே