கனவு மெய்ப்பட

விழித்தெழு தோழா ! விழித்தெழு !
உன் உள்ளத்தின் உறக்கம் களைந்திடு
நீ காண்பவை வெறும் கனவல்ல
ஆழ் மனதின் எண்ணங்கள் -உன்
வாழ்வை வளமாக்கும் வண்ணங்கள் !

காற்று வந்து கதவு தட்டினாலும்
மொட்டுகளின் முயற்ச்சியே பூவாகிறது !
கற்பனைக் குதிரையென்றாலும்
சிற்பியின் முயற்ச்சியே சிலையாகிறது !

தவளை
நீரிலும் நிலத்திலும் வாழும்
அது போல்
நிழல் கனவை நிஜமாக்கு !

கரையைத் தொடும் அலையாய்
முயன்றிடு
உறையைத் தொடும் வாளாய்
காத்திரு !

முயலே ஆயினும்
முயலாமை இருப்பின்
வெற்றியின் இடம் - வெற்றிடமே !

இயலாமை தவிர்த்து
என்றும் உழைத்தால்
வெற்றி தங்கிடும் - நம்மிடமே !

கனவு விளக்கின் திரிகளில்
எண்ணங்களை எண்ணையாக்கி
முயற்சியால் ஒளியேற்று !

கடலளவு கனவும் - உந்தன்
காலடி தொடும்
மலையளவு கனவும் - உன்முன்
மண்டியிடும் !

விழித்தெழு தோழா ! விழித்தெழு !
உன் உள்ளத்தின் உறக்கம் களைந்திடு ...!

எழுதியவர் : முஹமது யூசுப் (7-Mar-12, 10:20 pm)
பார்வை : 668

மேலே