தமிழா தமிழா நாளை நம் நாளே
தன்மானம் தொலைத்திங்கே
தமிழனாய் வாழ்வதற்கு .,
கொலையுண்டிருக்கலாம் என்
ஈழ தமிழனோடு .....
ஆறரை கோடி சொந்தமிருந்தும்
தட்டிக் கேட்க நாதியின்றி
தன் தலைவனை இழந்தாயே தமிழா ...
நம் இனத்தையே வேரறுத்த
இலங்கை அரக்கனுக்கு இன்முகத்துடன்
கம்பளம் விரிக்கிறது
காங்கிரஸ் அரசு...
பணத்திற்கும் பதவிக்குமிங்கே
பேயாய் அலையும்
பாழ்பட்டுபோன அரசியல்வாதிகளிடம்
அடகு வைத்து விட்டோமே
நம் இனத்தை.....
தமிழ் தமிழ் என்றிங்கே வாய்கிழிய பேசி
தமிழனின் கல்லறைகளுக்கு
இரங்கல் கவிதை இயற்றி விட்டார் தமிழா...
இன்னுமா உரைக்கவில்லை உனக்கு ????
நம் சொந்தங்களின் ரத்தமும் , சதையும்
மண்ணில் சிதறிய பின்னுமா பொறுமை காக்கிறாய் ....
தமிழனின் அடையாளமான வீரம் எங்கே ????
கண்டவனுக்கும் அடங்கி போய்
பாழ் பட்டு போனதோ உனது மறம் ?
பகைவனை கண்டு பல் இளித்து நிற்கும் இந்த பாழ் நிலை ஏனோ ...?
உயிரை விட மானமே பெரிது என்ற தமிழ் மரபை மறந்தாயோ....
ஏனிந்த அலட்சியம் ?
எப்போது அவிழ்தெரிய போகிறாய் அடிமை விலங்கை....?
அமைதி காத்து காத்து
உன் சொந்தங்களின் சாவுக்கு
துணை நின்று விட்டாயே...
எந்த கங்கையில் கழுவ போகிறாய் உன் பாவங்களை...?
சொந்த ஊரிலே அந்நியன் போல்
முகாமில் அடைபட்டு கிடக்கும் இந்த அவலம் இன்னும் எதுவரை....
மீதமுள்ள உன் சொந்தங்களையாவது
வாழ வைக்க வேண்டாமா ?
தமிழ் சமூகம் தலை தாழ காரணமாயிருந்த
கரை வேட்டிகளை தூக்கி எறி....
இரத்தமும் கண்ணீரும் மட்டுமே கண்ட அந்த கண்களுக்கு களிபூட்டு...
இனியும் பொறுமை காட்டி இருக்கும் சொந்தங்களையும் இழந்து விடாதே ...
இனி .......
ஒரு மீனவன் அடி பட்டாலும்
ஒவ்வொரு மாணவனும் கொதித்தெழ வேண்டும்...
தமிழன் மேல் ஒரு கீறல் விழுந்தாலும்
தமிழ்நாடே கொந்தளிக்க வேண்டும்....
இனி....
உன்னை எதிர்ப்பவனுக்கு எதிர்காலம் இல்லை என்றாக்கு....
தமிழனாய் தலை நிமிர்ந்து நில்
நீ நிற்பது சிறை அறையாய் இருந்தாலும் சரி...
போதும் பொறுமை
தமிழன் ரத்தத்தில் சூடு குறையவில்லை என உணர வேண்டும் உலகம்....
இனி.,
தமிழன்
வாங்கிய அடிகளுக்கு தர வேண்டும் பதிலடி....
தமிழா தமிழா நாளை நம் நாளே.....