காதல் புரியவில்லை..!

புதுமையாய் செய்ய நினைத்ததெல்லாம்
உனக்கு புரியாமலே போக..

புரிய வைக்கும் முயற்சிகள்
உள்ளம் அறியாமலே நோக..

எது கொண்டு உனக்கு
என்னை சொல்வேன்..

எது செய்தால்
உன் நெஞ்சம் வெல்வேன்..

ஈரமெனும் வெள்ளம்
ஏழைக் குடிசையை
அடித்தது போல்..

காதல் எனும் கடவுள்
என் கண்ணை பறிக்குதே..

புரிதல் இல்லாமல் பறிபோவது
எதுவானாலும் இருக்கட்டும்..

காதல் மட்டும் புரிதலின்
அகராதியாய் மாறட்டும்..

எழுதியவர் : kavithaayini (27-Apr-12, 10:28 am)
பார்வை : 532

மேலே