புதிய உறவுகள்
என்னைப் பார்த்தது குழந்தை.
பிறகு சிரித்தது.
தாய்தானோ என்று...
நினைத்து சிரித்தது.
பிறகு என்னுடன் வந்த
தோழியைப் பார்த்து....
'த்த ' என்று அழைத்தது.
கடைசியில் திரும்பிப் பார்த்து...
'ம்மா ' என்று அழைத்தபடியே
முழங்காலையும் ,கைகளையும்
தூக்கி தவழ்ந்து தவழ்ந்து
தள்ளாடியபடியே
அம்மாவின் மடியில்...!