நண்பர்கள்

பழைய குறிப்பேடுகளை
புரட்டியபோது...
அன்று
பள்ளியில் படிக்கும்போது
கல்லுரியில் படிக்கும்போது
எனக்குத்தான்
எத்தனை நண்பர்கள்!

எனக்குத்தான்
எத்தனை நண்பர்கள்!
எல்லோரும்தான்
எங்கே போனார்கள்?
வாழ்க்கைதேடி
அலைந்தபோது
அவர்களை நான்
தொலைத்துவிட்டேனோ?

இப்போதும்
நிறைய நண்பர்கள்
வேலைபார்க்குமிடத்தில்...
வாய்ப்பு கிடைத்தால்
என்னை மிதித்து
ஏறிச்செல்லும் நண்பர்கள்.

தெருவில் சில நண்பர்கள்
போட்டி நடத்தவும்
விழா நடத்தவும்
வந்துசேர்ந்த நண்பர்கள்

இதுபோல் நிறைய நண்பர்கள்
காரியம் ஆகவில்லை என்றால்
காயப்படுத்தும் நண்பர்கள்

அய்யா வள்ளுவரே!
உமது நட்பியலை
எத்தனைமுறை படிப்பது?
எனக்கு மட்டும்
எதுவும் புரியவில்லையே!.
நேரில் காணும்
இந்த நிஜநன்பர்களின்
நிஜ முகங்கள் தெரியவில்லையே!

இத்தனை ஆண்டுகளாய்
குழம்பிக்கிடந்த எனக்கு
தெளிவு தந்தது எழுத்து உலகம்
முகம் தெரியாத
முகவரி தெரியாத
எழுத்து நண்பர்களால்
என் இதய ரணம்
நீர்த்துப்போனதே!
கருத்து நண்பர்களால்
காயம் அழிந்துப்போனதே!

(அதனால்தான் எழுத்து தளத்தில்
என்னை பற்றி....எழுதும்போது
நன்றி -எழுத்துதளம்
எழுத்துதள நண்பர்கள்
என்று எழுதிவைத்தேன்.
நண்பர்களே!உழைப்பாளர் தினத்தில்
ஒரு உழைப்பாளியின்
உண்மையான வாழ்த்துக்கள்)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (1-May-12, 6:19 pm)
Tanglish : nanbargal
பார்வை : 271

மேலே