உரிமையுள்ள தோழியே........

நெஞ்சில் சிறு வீடு கட்டி
நிலவு உன்னை குடி வைத்தேன்-அன்பெனும்
பஞ்சில் நல் ஆடை நெய்து மன
பாவை உனக்கு பரிசளித்தேன்..........

உண்ணும்போதும் உறங்கும்போதும்
உறவாடும் உன் நினைவு...........
எண்ணும்போதும் எழுதும்போதும் அன்பை
களவாடும் என் மனது
எனக்கே தெரியாமல் உனக்காய்.........

வானத்தை மூடியிருக்கும் மேகம்--நீ
பேசாவிடில் குடியிருக்கும் சோகம்.....
கோடையில் அதிகம் மேகம் இல்லை-நீ
பேசினால் எனக்கு சோகம் இல்லை.............

உன்னை
எண்ணினால் இனிக்கிறது
எழுதினால் தமிழ் சுவைக்கிறது......
உண்மை நட்பின் தாகம்
உன்னால் தீருகிறது
உரிமையுள்ள சிநேகிதியே...............

மலர்ந்த அன்பு கொண்டு
மனதில் சுமக்கிறேனடி.....
உன்னுடன்
வளந்த நட்பால் தனிமை
துன்பம் இழக்கிறேனடி.......................

உயிரில் உன் பெயரை உச்சரிக்கிறேன்.....
வாழ்க்கை முழுவதும் வந்துவிடு--மெய்
அன்பை எனக்கு தந்துவிடு
ஆருயிர் சிநேகிதியே
அது மட்டும் போதுமடி எனக்கு
உயிர் நண்பனாய் இருப்பேன் உனக்கு.............

எழுதியவர் : கவியன்பு பெங்களூர் (24-May-12, 9:38 am)
பார்வை : 200

மேலே