வரம் எங்களுக்கு அருள்வாய்

குன்றாய், கல்லாய் இருந்த மலையை
குகையாய், குகையினுள் சிலையாய்
அமர்ந்து அருள் பாலிக்கும் தெய்வமாய்
வடித்து உன்னைப் போற்றுகின்றோம்!

கற்பக விருட்சமாய்,
கற்பக விநாயகனாய் அமர்ந்து,
வேண்டியதெல்லாம் வழங்கும்
பிள்ளையார்பட்டி அய்யனே!

உன் தாள் பணிந்தோம்,
வரும் வினை நீக்கி,
வளமும் நலமும் பெற
வரம் எங்களுக்கு அருள்வாய்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-May-12, 12:22 pm)
பார்வை : 203

மேலே