பொன்னானது வாழ்க்கை

விதையைப் பயிரிட்டு
வளம் கொழிக்க
மண்தானே-பொன்

மனிதன் மனதில் பயிரிட்டு
விதையிட்டு வளம்
கொழிக்க அவன் கண் தானே -பொன்

கற்களை உளியிட்டு
செதுக்கிட்டு உருவம்
வெளிப்பட அவன்
திறமைதானே -பொன்

நிலத்தை உழுதிட்டு
பயிரிட்டு உரமிட்டு
நெல்மணி வெளிவர அவன்
உழைப்புதானே -பொன்

வானமும் கடலும்
உன் வசமாக அவன்
கனவு தானே -பொன்

இறந்தது இறந்தகாலம்
நிகழ்ந்து தெரிந்தது
எதிர்காலம் அவன்
விழிக்காலம் -பொன்
எல்லாமும் பொன்தானே நம்
வாழ்க்கையில் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-Jun-12, 10:06 am)
பார்வை : 255

மேலே