துணிந்து நில்
நான்
படிக்கும்போதே
சிறு வயதில் தங்கிற்று
என் மனசில்.
அர்ஜுனன் கண்ணனிடம்
சொன்ன பகவத் கீதை
உபதேசம் .
"எதிரிக்கு அஞ்சாது
வீரத்தோடு பாய்ந்து நில்
அவனே சூரத் தன்மை
உடைய வல்லவனாகிறான்.
அச்சத்தை அறியாத
மனநிலை தேஜஸ் என்ற
துணிவுடன் போராடுவதுதான்.
வீரத்துடன் எதிர்த்து நின்று
அடிபட்டுச் சாவதே மேல் "
என்றார் கண்ணா பரமாத்மா.
நாமும் துணிவோடு நிற்போம்
நாட்டு மக்களுக்காக!