பாரதி தாசன் வரிகள்

நீல வான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை!
கோலமுழுதும் காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ!வானச்
சோலையிலே பூத்த தனிப் பூவோ நீ தான்
சொக்க வெள்ளிப் பாற்குடமோ! அமுத ஊற்றோ!
காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!

எழுதியவர் : செயா ரெத்தினம் (10-Jun-12, 6:43 pm)
பார்வை : 1332

மேலே