உயிரின் உயில்
தொலைவுகள் மலிவாகிப் போனதால் விளைவுகள் வலியோடு,
நுரையில்லா வெல்லமாய் காதல் ஓடையில்
தரையில் இட்ட ஓடாய் என்னை மாற்றி ஓடினாயேப் பெண்ணே,
தொட்ட்டுப் பேச மட்டில்லா ஆசைகள் மனதை நிறைத்தாலும்
கட்டிப் போட்டு கட்டுக்குள் வைத்திருந்தேன்,
விட்டுப் போனாய் தட்டி இட்டு தடுக்க இயலவில்லை இனியவளே,
இனி என்னவாவேனோ மயிலே,
உறவுப் போனது எந்தன் துயிலோடு,
என் உயிரின் மொத்தம் நீ எனக் கூறி கத்திருப்பேன் உயிலோடு.