சுமைதாங்கி

நரைத்த தலையில்
பழுத்த நினைவுகள்

பணிந்த உடலில்
பற்றிநிற்கும் ஊன்றுகோல்

சுருங்கிவிட்ட தசைகள்
தொலைந்துபோன பார்வை

தளர்ந்த குரல்
தள்ளாடும் நடை

சின்னக்குழந்தை போல
பேரக்குழந்தைகளுடன்

கொஞ்சிவிளையாடும்
சுமைதாங்கிகள் ஒவ்வொரு
குடும்பத்திலும்,

நலம்பேனவேண்டும்
அவர்கள் மனம்நோகவேண்டாம்

நாளைய சுமைதாங்கி நாம்
என மனதில் நிறுத்தினால்

முதியோர் இல்லம்
இல்லாமை செய்யலாம்

பிரபுமுருகன்.........

எழுதியவர் : பிரபுமுருகன் (4-Oct-10, 4:47 pm)
சேர்த்தது : Prabhu
பார்வை : 674

மேலே