கடிந்திடு சோம்பலை இளவல்நீ!
கடுமைகொண்ட தோளினாய் பாரில்நீ
கடமைசெய்ய ஆயிரமுண்டு தெளிவாய்
நடுக்கடலில் மூழ்கி முத்தாய்பணி
நட்டவேண்டாமோ தெளிநீ தெளி!
ஆயிர மாயிரம் கனவுகளுடன்நீ
அகிலமெங்கனும் சுற்றுகிறாய் பார்
தேய்ந்து செல்லும் பாதம்மட்டும்
தெளிந்திடு அதனில் விளக்கந்தான்!
விடலைப் பருவமது தாண்டிநீ
வித்தைகாட்டும் பருவம் கண்டனை
தேடலில் நாளும் நீஉயரு
தரணியி லுயர்மொழி உனதன்றோ?
நாட்டின் சொத்தே இளவலே!
நம்பிக்கைவை உன்னில் நானென்று
ஏட்டில் உன்பெயர் பதிவாகும்
ஏற்றம் கண்டிடும் படையன்றோ?
நாட்டின் கல்வி சிக்கலன்றோ
நினைத்திடின் நீயும் பேடியன்றோ
பாட்டுக்கள் புதுபடை நீயுயர
பெருமை கொள்ளும் நாடுமன்றோ!
ஆழச்சென்று ஆழியில் சென்று
அரிதான முத்தினைப் பெறுமாப்போல்
வீழச்செய்திடும் இடுக்கண் கண்டுழிள
வீழ்ந்திடதாதே – நீநிமிரு நீவாழ!
களிபடைத்த மொழியுடை இளவலே
கருத்தினில்வை உன்னாற்றல் மேலுயரும்
களிகொள்வாய் உன்னைப் பார்போற்ற
கடுமைகொண்ட தோளினாய் நீயெனும்போ!
இமாலயத்தை நீதொட ஏறுசிறுமலையாதி
இமயம் உன்கைக்குள் வந்துவிடும்பாரு!
விமானம் புதுபடை வளங்களுனக்குள்
வேண்டு மதற்கு உனக்குள்விருப்பு!
அக்கினிப் பிழம்பதை அங்கையில்நீகொள்
அக்கினியாவிது எனப் பாரில்நீசொல்
போக்கிரித் தனங்கள் உனக்குள்நாண
பேரும்புகழும் நீபெற உனைநம்பு!
முடியாத தேதுளது எனதிளவலேநீ
முயற்சியுடைத்தாயின் எலாம் பாதவருகே!
கடியாதே இயலாதென்றுநீ மட்டும்
கடிந்திடு சோம்பலை கழற்றிடதனை!
எல்லாமாம் என்னாலே என்ற
எடுப்பான மந்திரத்தை கைக்கொள்நீ
பொல்லாத கருமமதும் அங்கைபாரு!
பாருனைத் துதித்திட பாரைப்பாரு!

