திருமண பரிசாக உயிரை தந்த காதலன்

காதலை என்னிடம் சொல்லி விட்டு
நீ இன்னொருவனிடம் வாழ போகிறாய்
கனவு தந்த காதல்
கண்ணை திறக்கும் போது காணவில்லை
காலம் தந்த காதல்
கையெழுத்து போல அழிந்து போனதே
உன் கண்களில் மைய் தீட்டும் போது
என் கண்களை மூடி உறங்க போகிறேன்
உன் உதட்டில் கலர் வண்ணங்கள் பூசும் போது
நான் ஊமையாக போகிறேன்
உன்னை இசை வாழ்த்தி நீ வாழ போகிறாய்
இசை என்னை வலி அனுப்பி விட்டு போக போகிறதே
பூக்கள் தூவி நீ வாழ போகிறாய்
பூக்களை உதிற விட்டு நான் கல்லறையில் புதைந்து போக போகிறேன்
நீ காலம் முழுதும் கண்ணீர் இல்லாமல் வாழ போகிறாய்
நான் காலம் தோறும் கண்களை மூடி வாழ போகிறேன்

எழுதியவர் : பனித்துளி வினோத் (26-Aug-12, 5:32 pm)
பார்வை : 379

மேலே