எழுத்தாளன்...

"மரங்களை வெட்டாதே"
என்ற கதையை
எழுதிவிட்டு

அதை...

வெட்டப்பட்ட
மரத்தாலான
புத்தகத்தில்
வெளியிட்டேன்...

இன்று மரங்கள்
எனைப் பார்த்து
ஏளனமாய்ச்
சிரிக்கிறது...

சொல்வதைச்
செய்யாதோர்
பட்டியலில்
நானும் ஒருவன்...

ஒரு எழுத்தாளன்..!

எழுதியவர் : அகல் (3-Sep-12, 2:34 pm)
பார்வை : 166

மேலே