கற்பனைதான்..

இமைகள் கட்டியணைத்து
மனங்களை படுக்கையாக்க,
வந்து விழுகின்றாய் நீ
நினைவுகளாய் என்னருகில்.

நித்திரை பறித்து
உன்,
முகங்கள் பதியும்
என்,
மார்பினை தொட்டுச்சொல்வேன்
நீ
எனக்குமட்டும் சொந்தமென்று.

தோள்களிலே சாய்ந்தபடி
துணிவுடனே இதழ் நனைப்பாய்,
நானும் தான் உன்னை
உண்மையாக விரும்புவதாய்.

கட்டிப்புரண்டு களிப்புண்டு நாமிருக்க,
தெவிட்டாத இன்பங்களை
விரட்டியடித்த சூரியனை
துரத்திட தேடுகிறேன் மறு இரவை.

எழுதியவர் : S.Raguvaran (6-Sep-12, 8:46 am)
சேர்த்தது : Raguvaran
பார்வை : 279

மேலே