கிறுக்கனின் கிறுக்கல்கள் - 3

அறிவுரை சொல்லும் முன்
உன்னை நீயே
உளமார
ஆராய்ந்து கொள்வது
ஆகச் சிறப்பு .....

============================================

தன் கையை விட
தன்னம்பிக்கை வலியது !
தன் கையும் தடுமாறும்
தன்னம்பிக்கை தளர்ந்துவிடில் ........

============================================

ஆசை துறவினை போதித்த
ஆன்மிகம் இன்று சில
ஆசிரம ஆசாமிகளின்
ஆடை துறவு போதனை கண்டு
ஆறாத்துயரில் அழுகிறது...

==========================================

எவனொருவன் பெண்ணிடம்
காதல் தோல்வி என்று
கதையளக்கிறானோ
அவன் அப்பெண்ணை
கவரநினைத்து
காய் நகர்த்துகிறான் - பெண்மனம்
காதல் தோல்வி என்ற வாதத்தில்
கரைந்துவிடுவதனால்.......

===========================================

காதலும் போதைதான் - அது
உறங்கவும் வைக்கும்
உளறவும் வைக்கும்.....

============================================

காதல் !
காமத்தின் ஒத்திகையாய்
காமுகர் கைப்பாவையாய் மாறி
காலம் பல தாண்டிவிட்டது ...........

============================================

பணம் கோரும்
பத்து யாசகர்க்கு - நீ
பகிர்ந்தளிக்கும் சில்லரையை
பசியென்று கை ஏந்தும் ஒருவனுக்கு
பசியாற்றும் உணவாய் தந்தால்
பாரினில் அதுவே சிறந்த தானம் .................

===========================================

அசைவம் உண்டவனை
அபசாரம் என்று
பட்டுநூல் உடையணிந்த
பண்பாளன் சொல்கிறான்...

===========================================

கோழி அறுப்பவனை விட
கொடியோர் ?
பட்டாடை அணியும்
பயங்கரவாதிகளே !

=============================================

பெண்ணும் வாழையும் ஒன்று ,
தனக்கென வாழாது
பிறர்க்கென வாழ்வதால் ................

==============================================================================================

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா ..... (13-Sep-12, 4:20 pm)
பார்வை : 264

மேலே