பெயர் சூட்டு (லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி)

புயலடித்ததும்
புரிந்துபோனது...
அதன் காரணம்
நீயென்று..

என் கோடை மனவானில்
மேகங்கள் சூழ்கின்றதே?

யாரோ அறிவிக்கின்றார்கள்
வானிலை அறிக்கை - இனி
எப்பொழுதும் என்
மனசுக்கு மழைக்காலமென்று...

பூக்களின் ரகசியங்கள் - உன்
புன்னகையில் அவிழ்ந்தன

பூமியின் விரசங்கள் - உன்
கால்களுக்குள் அமிழ்ந்தன

நீ எட்டியிருந்தாய்
என்னைவிட்டு -
இதயத்தில் வலி...
ஒட்டியிருந்தாய்
சுகம் என்ற சொல்லுக்கு
அர்த்தமே அப்பொழுதுதான்
புரிந்தது....

ஒருநாளும் ஆனதில்லை
இப்படி...
இன்றுமட்டும் என் இப்படி???

என் உள்ளம் இதுபோல்
உழன்றதில்லை...
கவிதை தன்னால்
கழன்றதில்லை...

என்ன பெயர் வைப்பதேன்றே
தெரியவில்லை - என்
உள்ளத்தில் ஜனித்த
இந்த "உறவென்ற"
குழந்தைக்கு...

பெயர் வைப்பதில்
பெரியவளாமே நீ...
நம் இந்தப்
புத்தம் புது உறவுக்கும்
நீயே வைத்துவிடு
மூன்றெழுத்தில் ஒரு பெயர்...

எழுதியவர் : நெல்லை மணி (10-Oct-12, 10:06 pm)
சேர்த்தது : நெல்லை மணி
பார்வை : 195

மேலே