தளிரே மலாலா !
உண்மை உரைத்து
உலகையே உன் பக்கம்
திரும்பி பார்க்க வைத்த
தளிரே ..!
உன் பாதையில்
முட்களை விதைக்கின்றனர்
பாதகர்கள்
நீ பயணிக்கும்
உன் சாலைகளை
மூடி விடவும் முனைகின்றனர்.
கலங்காதே கண்ணே
நீ இழந்தது சில நாட்களையே
நீ விதைத்தது பல வருடங்களை
எம் மீது படிந்த பல நூற்றாண்டு
தூசியை தட்டி விட்டன
உன் பிஞ்சு கரங்கள்
சில பாவிகளின் சட்டைகளை
உலுக்கியது உன் குரல்
உன் நோக்கம் தூயது எனின்
அநியாயக்காரர்களுக்கு அஞ்சாதே
அஞ்சுவதும் அடி பணிவதும்
படைத்தவனுக்காக இருக்கட்டும்
தோல்விகளில் துவண்டு விடாமல்
தொடர்ந்து முன் செல்ல
ஈழத்து பாவை என் பிரார்த்தனைகள்