ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .
கற்பனைதான்
கல்வெட்டானது
தேவதை !
கிடைக்காததற்கு ஏங்குவது
கிடைத்ததை உணராதது
பலரின் வாழ்க்கை !
ஏழு வண்ணங்களில்
எண்ணம் கவரும் வில்
வானவில் !
பிரிந்து
பின் சந்தித்தால்
சுவை அதிகம் !
நாட்டு நடப்பு
நேற்றைய நவீனம்
இன்றைய நவீனமன்று !
பெயர் பொறிப்பவர்கள்
உணருவதில்லை
மரத்தின் வலி !
காயம் இல்லை
மரத்திலிருந்து விழுந்தும்
இலை !
மரமானதற்கு
வருந்தியது
சிலுவை மரம் !
தந்திடுவீர்
தானத்தில் சிறந்தது
உடல் தானம் !
அசலை வென்றது
நகல்
செயற்கைச் செடி !
பசிபோக்கும்
அட்சயப் பாத்திரம்
அவள் முகம் !
உணர்த்தியது
பொதுவுடைமை
செம்பருத்திப் பூ !
மூளையின்
முடங்காத முயற்சி
எண்ணங்கள் !
இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இனிய இசை !

