என் குட்டிதேவதை
இதோ!
வந்து விட்டாள்,
என் குட்டி தேவதை !
அங்கமெல்லாம்
பூ பூக்க ,
பகல் இரவு வரவேற்க ,
பட்டாம் பூச்சியாய்
பிரவேசித்தாள்!
தொட்டால் சிணுங்குவாள் !
தொடாவிட்டால் ஏங்குவாள் !
இரவானால் கதை பேசி ,
பகலானால் விழிமூடி
பம்பரமாய் ஆட்டிவைப்பாள்
என்னை
பக்குவபடுத்தி பரிச்சிப்பாள்!
மேகம் முகம் காட்டும் !
மின்னல் ஒளிவெட்டும் !
அவளும் அப்படித்தான் ,
என் முகம்
தூக்கிச்சிரிக்கும் போது!
அவள்
எந்த கவிஞனின்
கற்பனை யிலும்
களவாடப்படாத முதல் கவிதை !
எனக்குள் விழுந்த
இரண்டாம் விதை !
மின்சாரம்
எதற்கு ?
அவள் மேனி போதுமே,
ஆயிரம் மடங்கு
மின்னுவதற்கு !
என் அணுவின்
ஒவ்வொரு
துளிக்குள் ...
அவசர அவசரமாய்
புகுகிறாள் !
அடுத்தவருக்கு இடம் கொடுக்காமல்
அலட்சியமாய்
முறைக்கிறாள் !
தொலைபேசி
எடுத்தாலோ,
ங்க.............
அம்மா ...........
யானு .............
என கொஞ்சி கொஞ்சி
பேசுவாள் ,
விரலுக்கும் வீணைக்கும்
இடையே விழும்
இசையாய்......!
ஒரு பொளுளை
வாங்க
அவள் போடும்
சண்டை இருக்கிறதே ?
அப்பப்பா !
கார்கில் வீரனை
அப்படியே
கண்முன் காட்டிவிடும்!
கடவுளை விட
இவள்
கருணை தான்
அழகு ,
கையில் இருப்பதை
யோசித்து யோசித்து
தரும் போது !
இவள்
எச்சில் பட்டால்
போதும்,
எரிமலையும் தூங்கி போகும் !
பைசா கோபுரமும்
நிமிர்ந்து போகும் !
தத்தி தத்தி
இவள்
நடந்தால் .....
தரை எல்லாம்
பூப்பூக்கும்!
தங்க மக
இவ
சிரிச்சா?
சிந்தை எல்லா தான்
மயங்கும் !
பட்டுக்குட்டி
பார்வைப்பட்டால் ,
பாவமெல்லாம் ஓடிப்போகும் !
என்
அம்மு குட்டி
பக்கம் வந்தால்
அதிர்ஷ்டம் எல்லாம்
கூட
வரும் !
புத்தாடை
பல உடுத்தி
சிற்றிதழ் குலுங்க குலுங்க
இவள் சிரிக்கும்
சிரிப்புக்கு
மத்தாப்பு மயங்கி போகும் !
என்
மனதிற்குள்
தேன்ஒழுகும் !
இவள்
அழகு ...............
சொல்லிச்சொல்லி
மாளாது !
இவள்
செய்யும் குறும்பு
என்
நினைவை விட்டு மீளாது!
இறைவா!
எனக்கு நிறைய
ஜென்மங்கள் கொடு !
எல்லா வற்றிலும்
இவளையே
எனக்கு
மகளாய் கொடு !
(இந்த கவிக்கு தலைப்பு கொடுத்தவர் என் அண்ணன் அஹமது அலி.அவரின் தூ ண்டுதலால் எழுத பட்டது .)