பெண்ணடிமை

நேர்கொண்ட பார்வை,
நிமிர்ந்த நன்னடை,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவு
கொண்டவள் பெண் என்றாயே,
முண்டாசுக் கவிஞா...!
என்ன பயன் இவற்றால்?
உம் கால பெண்மை வேறு
எம் கால பெண்மை வேறு
மீண்டும் ஒரு ஜனனம் எடுத்து வா கவிஞா...
பெண்ணாக மட்டும் பிறந்து விடாதே
தரித்த கணம் புதைந்து விடுவாய் மண்ணுக்குள்...
யாம் எடுக்கும் பெருங்குரலில்
கல்லுக்கும் உயிர் வந்து விடும்
உன் காளிக்கு மட்டும் செவியில் விழவில்லையா?
பெண்-இது போதுமடா
நான் ஒதுக்கப்பட..
கண்டு கொள்வார் யாரும் இல்லை
கட்டி அணைப்பாரும் யாரும் இல்லை
விடியலை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்....!
கிடைக்குமா தலைவா....?