என் உயிர் பைந்தமிழ் பாவைக்காக .......

என் உணர்வுக்குள் நுழைந்து
உயிருக்குள் கலந்த
பைந்தமிழ் பாவையே!
இன்று என் உணர்வை கொன்று
உயிரை உருக்கி சென்றதும் ஏனோ?
உன் பொற்பாதம் பட்ட இடமெங்கிலும்
உன் வாசம்.....
ஏனோ என்னில் அதை காணோம்?
குளத்தருகில் அல்லி மலர்
பூப்பதற்காக தவமிருந்தேன்!
நான் தவமின்றி கிடைத்த சொந்தம் நீ!
என் சொந்தமே நீ என்னிடம்
சொல்லாமல் போனதென்னவோ?
சொல்லாமல் போன சொந்தம்
சொல்லாமல் வந்தபோது என்னுள்ளே
புயல் வீசியதே.....
என் அன்னையின் அவதாரமாய்
காத்திருந்தேன் ....
மறுபிறவி எடுத்து வந்தாயோ?
மெளனத்திற்கே மௌனமாய்
பதில் தரும் என் செந்தமிழ் பாவையே.....
உன் கவி வரிகளில் எனக்கு
பதில் தருவாயா?????

எழுதியவர் : ஜோதி (13-Nov-12, 10:58 pm)
பார்வை : 257

சிறந்த கவிதைகள்

மேலே