ஓர் நாய் குட்டியைப்போல !

என்னைத்தன் ஆளுமைக்கு
உட்படுத்த நினைக்கும் - அவளின்
உதட்டோர மச்சத்திற்கு
வெகு அருகாமையில்
வந்தமரும் காதலினால்,
உலகமே கண்சிமிட்டும்
ஏதோ ஓர் நொடியில் - என்னைத்தன்
இமையிடுக்குகளில்
கடத்திப்போக காத்திருக்கிறாள்,
ஓர் நாய் குட்டியைப்போல !

எழுதியவர் : வினோதன் (20-Nov-12, 12:13 pm)
பார்வை : 147

சிறந்த கவிதைகள்

மேலே