முனைவர் இர வினோத்கண்ணன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  முனைவர் இர வினோத்கண்ணன்
இடம்:  தஞ்சாவூர், தற்போது சீனாவி
பிறந்த தேதி :  21-Sep-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Aug-2012
பார்த்தவர்கள்:  3276
புள்ளி:  2166

என்னைப் பற்றி...

பிராண வாயுவைவிட
பிரதானமாய் - நட்பை
சுவாசித்து நடமாடும்
சோழச் சிறுவன் !

தமிழ் மீது தீராக்காதல்
ஆறாய்ப் பாய - அறிவியல்
மீதான ஆராய்ச்சிக் காதல்
கடலாய்ப் புக - முப்போகமாய்
இனித்துக் கிடக்கிறது வாழ்வு
முதல்மழையின் உழவைப்போல !

எதுவும் கைவரும்,
தமிழன் என்பதால்
கவிதையும் !

அறுவாள் வேண்டாம்,
அன்பே போதும் - எனை
இழுக்கவோ, அறுக்கவோ !!!

உயிர்-வேதியியலில் இளங்கலை, முதுகலை மற்றும் பிஹெச்டி முடித்துவிட்டு, ஐஐடி சென்னையில் இணை ஆராய்ச்சியாளாராக பணிபுரிந்தேன். தற்போது சீனாவின் ஷாண்டாங் பல்கலைகழகத்தில் முனை முதுநிலை ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறேன் .

கவிதைகள் பற்றிய உங்கள் விமர்சனங்கள், கவிதைகளை மேலும் கூர்தீட்ட உதவி செய்யும் !

என் படைப்புகள்
முனைவர் இர வினோத்கண்ணன் செய்திகள்

ஏன் மாஸ்க் அணிவது அவசியம்  ?  

இதுவரை  சுமார்  2,907,944    பேரை காவு கொண்ட கொரோனா,  இப்போது தனது இரண்டாம் இன்னிங்ஸ் இனிதே ஆரம்பித்து விட்டது.  போன முறை ஏற்படுத்திய தாக்கங்களை விடவும் இந்த முறை ஏற்படுத்த போகும் தாக்கங்கள் அதிகமாக இருக்குமென அறிவியல் உலகம் ஐயமுறுகிறது. கொரோனாவின் முதல் தாக்குதலையே சமாளிக்க முடியாமல்  திணறிக்கொண்டிருக்கும்போது, உலகின் பல நாடுகளையும் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை தாக்குதல் மேலும் பலமாக இருக்கிறது. இதற்கான முக்கிய காரணம், திடீர் மாற்றம் (Mutations) ! ஆம், ஒவ்வொரு மனிதனையும் ஒரு சோதனை குடுவைபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள், அதில் பல்கி பெருகும் இந்த வைரஸ், அந்த மனிதனுக்கு ஏற்படுத்தும் இன்னல்கள் ஒருபுறம், மறுபுறம் பல்கிப்பெருக்கும் இந்த வைரஸ் தனது மரபணுக்களில் எற்படும் திடீர் மாற்றங்கள். அதன் காரணமாக உருவாகும் மாற்றமுற்ற கொரோனா வைரஸ் வகைகள், அதீத வீரியத்துடனும், மிக வேகமாக பரவும் தன்மையுடனும் இருக்கின்றன. தற்போது கண்டறியப்பட்டுள்ள பிரேசிலியன் வகை (P1 variant), சுமார் 17 அமினோ அமிலங்களின் மாறுபட்டிருக்கிறது, அதில் 10 அமினோ அமிலங்கள் Spike புரதத்தில் உள்ளவை. இதற்கு ஏன் பயப்பட வேண்டும் என்கிறீர்களா ? இது ஆதி கொரோனாவைவிட 2.4 மடங்கு வேகமாக மற்றும் வீரியமாக பரவக்கூடியது. மேலும், இது சிறார்களையும், இளம் வயதினரையும்கூட தாக்குகிறது. இந்த வகை உலகின் பல பகுதிகளிலும் பரவ தொடக்கி விட்டது. தொற்றுகள் அதிகரிக்க அதிகரிக்க இது போன்று பல வகை கொரோனாக்கள் உருவெடுக்கத் தொடங்கியிருக்கின்றன, துரதிஷ்டவசமாக இதில் சில மிகவும் ஆபத்தான வகைகளும்  உருவாகலாம்.  

இந்தியாவை பொறுத்தவரை, இரண்டாவது அலை மிக வேகமாக பரவத் தொடக்கி இருக்கிறது. தொற்றுகள் அதிகரிக்க அதிகரிக்க மிகவும் ஆபத்தான வகைகளும்  உருவாகும் வாய்ப்பும் அதிகம். பத்தில் எட்டு பேர் மாஸ்க் அணிந்திருந்த நாட்கள் போக, இப்போது பத்தில் இரண்டு பேர் அணிந்திருந்தாலே அதிசியம் என்ற நிலையில் இருக்கிறோம். கொரோனா தொற்றுகள் குறையவும், மக்களுக்கு அது பற்றிய பயம் போய்விட்டது. சுனாமியை பற்றி சொல்லும் பொது, ஒன்றை குறிப்பிட்டு சொல்வார்கள். முதல் அலையில் நிறைய பேர் இறக்கவில்லை, என்ன ஆயிற்று என்று வேடிக்கை பார்க்க போனவர்கள்தான் இரண்டாவது அலையில்  பெருவாரியாக இறந்து போனார்கள். மேலும் அப்போது தப்பித்தவர்கள் கூட, நுரையீரலில் கருமன் படிந்ததால் இறந்தார்கள். அது போல இந்த இரண்டாம் அலையை நாமோ, அரசாங்கமோ எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. இதை முளையிலேயே கிள்ளி எரிய தேவையான நடவடிக்கைகளை, தேர்தல் திருவிழாவை முன்னிட்டு மறந்து விட்டோம்.  

எல்லாம் சரி, அதுதான் தடுப்பூசி வந்துவிட்டதே என்று பிறகென்ன கவலை என்று நீங்கள் கேட்கலாம். உலகின் 83 நாடுகளுக்கு உதவும் அளவிற்கு, உலகின்  தடுப்பூசி ஊற்றாக  இந்தியா உருவெடுத்துள்ளது மிகவும் மகிழ்வுக்குரிய விடயம். ஆனால், தடுப்பூசி பற்றிய பொதுமக்களின் பயமும், அதை சுற்றியுள்ள அரசியலும் மிகப்பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது. இந்தியா தனது நாட்டு மக்களுக்கு பயன்படுத்திய வேக்சின்களை விட (28 million doses) இரண்டு மடங்கு வேக்சின்களை (58 million doses) மற்ற நாடுகளுக்கு அளித்துள்ளது. தற்போது இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள சூழ்நிலையில், இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஏற்கனவே தடுப்பூசி பற்றாக்குறையை மேற்கோள் காட்ட துவங்கிவிட்டன. மற்ற மாநிலங்களில் கூட முதல் டோஸ் எடுத்தவர்கள் இரண்டாவது டோஸ் போட சென்றபோது காத்திருக்கும்படி பணிக்கப்பட்டுள்ளனர். தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கும் பிரதமர், “தனக்கு மிஞ்சித்தான் தானம்” எனும் பழமொழியையும் உணர வேண்டிய தருனமென நினைக்கிறேன்.  

தடுப்பூசி பற்றிய பொதுமக்களின் அச்சம்தான் பிரதான பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு கீழ்காணும் விடயங்கள் காரணங்களாக இருக்கலாம். 
1. கோவாக்சின் உட்பட அனைத்து தடுப்பூசிகளும், இந்த தொற்றுப் பேரழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு அவசர அவசரமாக கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்டவை. வேக்சின்களுக்கான பொதுவான ஒழுங்குமுறை கொள்கைகளை கடைபிடித்து வெளிவந்தவை இல்லை. அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி பெற்றவை மட்டுமே. இது பொதுமக்களுக்கு ஒருவித நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி இருக்கிறது.

2. குறிப்பாக, இந்தியாவில் கோவாக்சின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்தபோது, அதன் மூன்றாம்  கட்ட முடிவுகள்கூட வெளிவரவில்லை என்பது பலருக்கும் குழப்பத்தையும், பயத்தையும் விதைத்திருக்கிறது.

3. Astra Zeneca தடுப்பூசி பயன்படுத்தியவர்களில் சிலருக்கு இரத்த உரைதல் (Vaccine-Induced Prothrombotic Immune Thrombocytopenia (VIPIT)) ஏற்பட்டு மரணத் தழுவி யிருக்கின்றனர். இது உலக முழுவதும் வேக்சிங் பற்றியும் பயத்தை மேலும் கூட்டி இருக்கிறது. (வாசிக்க: https://www.nejm.org/doi/full/10.1056/NEJMoa2104882)  

4. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இப்போது தடுப்பூசி வழங்கப்படுகிறது. அந்த வயதுக்காரர்கள் பொதுவாக கொரோனா வந்தால் பார்த்துக்கொள்ளலாம், தடுப்பூசி போட்டு ஏதும் பிரச்னை வராமல் இருந்தால் சரி என்கிற மனநிலை இருப்பதாக தெரிகிறது.

5. தடுப்பூசி  என்றாலே இலுமினாட்டிகளின் சதி என்று பேசும் 1000 YouTube சேனல்கள் கூட ஒரு காரணமா இருக்கலாம்.

6. இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கும், கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள், பிறகு அதை ஏன் போட வேண்டும் என்று கேள்வி சத்தமாக கேட்கிறது.

7. ஏற்கனவே கொரோனா வந்தவர்களுக்கு கூட, ஓராண்டு கழித்து மீண்டும் கொரோனா வருவது தடுப்பூசி மீதான அடிப்படை புரிதல்களை கேள்விக்குள்ளாக்குகிறது.

இந்த மாதிரியான பல  கேள்விகளை கொண்டுள்ள மக்களுக்கு, போதுமான பதில் அளித்து மக்களின் ஐயப்பாடுகளை தீர்த்து வைப்பது அரசின் கடமை. மேலும் வயது கட்டுப்பாடுகளை தளர்த்தவும் அரசு பரிசீலிக்க வேண்டும்.  

கொரோனா பற்றிய எல்லாமுமே முயற்சி மற்றும் பிழை (Trial and Error) அடிப்படை தான். அறிவியல் உலகம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறது. பணக்கார நாடுகளும், நலிந்த நாடுகளில் உள்ள பணக்காரக்ளும் மட்டுமே இப்போது தடுப்பூசி சென்றடைந்து கொண்டிருக்குகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த தடுப்பூசிகளின் தயாரிப்பு முறை காப்புரிமைகளை தற்காலிகமாக விலக்களித்து, உலகின் மூலை முடுக்கெல்லாம் தடுப்பூசிகள் சென்று சேர்வதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா செல்வது முற்றலும் உண்மை. இந்த பேரழிவு காலத்தை, வணிக நோக்கோடு பார்ப்பது மனிதத் தன்மையற்ற செயலாகவே புரிந்துகொள்ள முடியும்  

இரண்டாம் அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி பற்றிய அச்சங்களை போக்கி, நாடு முழுமைக்கும் தடுப்பூசி போடுவது காலமெடுக்கக்கூடிய ஒரு விடயம். கொரோனாவை பொறுத்தவரை, உலகில் ஒவ்வொரு தனிநபருக்கு பாதுகாக்கப்படும் வரை, யாருமே பாதுக்காப்பாக இருக்க முடியாது. தடுப்பூசியின் செயல்திறன் பற்றிய கேள்விகள் மற்றும் திடீர் மாற்றமடைந்து வீரிய வகை கொரோனாக்களின் படையெடுப்புகள் வேறு. தற்போதைய மிகவும் சிக்கலான சூழலில் உங்களுக்கு மாஸ்க்கை விட பேராயுதம் இருக்கிறதா என்று யோசித்து பாருங்கள் ? 

- முனைவர். இர. வினோத்கண்ணன்.         

மேலும்

கட்டுத்தறிக் காளையென
ஒத்திசைந்து ஓடுகின்றன
தனித்தனி காடுகளில்
வெற்றிடக் கூடுகளில்
தவமும் இருந்தபடி !

இடியோடி இடுப்பேற
வந்தாலும் - இருதயக்குடுவை
தெறித்தோடி விழுந்தாலும்
பின்னோக்கிப் பார்ப்பதில்லை
யாரிட்ட கட்டளையோ ?!

சுக துக்கங்களை
பளிச்சிடும் பற்களுடனோ
கண்ணுப்பு நீருடனோ
கடந்து விடுகின்றன
கண்டு ரசிக்க, ருசிக்க
எதற்கும் நேரமின்றி !

தலைதிருப்ப விழைந்து
தவறிய நொடிகளும்
தாண்டிவிடத் துணிந்து
கனியாக் கனவுகளும்
கோடிகளில் உண்டு !

"காக்கா உட்கார்ந்த கதைதான்
தெரிவதில்லை யாருக்கும்"
அவர்தம் புலம்பல்கள்
கண்ணாடிக் கூடுதாண்டி
வருவதில்லை ஏனோ !

தொடுதிரையி

மேலும்

சீரழியும் நம் நாட்டை
சீராக்கிக் காட்டிட
வீடேறி கைகூப்பும்
கொழுத்த சாக்கடைகள்
கொடுத்த பணத்திற்கு
விலையாக விளைந்த
வாலறுக்க வேண்டாமா ?

மூளையை மட்டுமல்ல
முதுகெலும்மையும்
பணத்தாளின் பாதத்தில்
புதைத்து விட்டு - நீவிர்
வெள்ளுடை நரிகளை
வென்றிட துணைபோதல்
சுய துரோகமில்லையா ?

நீங்கள் தீர்மானிப்பவன்தான்
நாட்டின் தலையெழுத்தின்
முன்னெழுதென உணர்ந்தும்
கையூட்டு வாங்கிவிட்டு
கையறு நிலை கண்டால்
கரைவேட்டிகள் தரப்போவது
அல்வா அல்லவா ?

தமிழின மரபணுவில்
பின்னிக் கிடக்கும்
தன்மான இழைகளை
உருக்கி ஊற்றிவிட்டு
வாழும்போதே வாய்க்கரிசி
உண்ணுதல் தகுமோ ?

பெருச்சாளிகள்

மேலும்

என்னான்மக் குடுவையில்
கோடிகடல் உயிர்கொட்டி
சிறகுடை கயலென
நீந்திக் களிக்கிறாய்
அலைகளை மென்றபடி !

வாழ்க்கை வானவில்லில்
உச்சிக் கிளைக்கண்டு
முகட்டின் மூக்கினை - உயரே
பறக்க விடுகிறாய்
கயிறறு பட்டமாய் !

கனவால மரத்தின்
சிறகிடை பொந்தினுள்
சன்னல்களால் நெய்த
கூடொன்றை பிறப்பித்து
அடையப் பணிக்கிறாய் !

உள்ளங்கை ரேகையெங்கும்
ஜீவ நதியென விரவி
சில்லிட வைக்கிறாய்
ஆயுள் முழுதிற்கும்
அசைபோட்டுச் சிலாகிக்க
நினைவுகள் தந்துவிட்டு !

உன்னுடனான
ஒவ்வோர் நொடியும்
தத்தம் முகத்திலோர்
தந்தமும் துதிக்கையும்
வரைந்து கொண்டு
நீரிரைத்து மகிழ்கின்றன !

துளசிமாடமென - உனை

மேலும்

முனைவர் இர வினோத்கண்ணன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Oct-2017 4:44 pm

உடல் தானம் செய்த
அம்மரம் - நாற்காலியாகி
உட்கார்ந்து கொண்டது,
உயிர் மட்டும் தாவி
சொர்க்கம் சென்று
கடவுளை தேடியது !

தன் கிளைக் கைகளால்
தன்னை கிள்ளி
நடப்பை நம்பியபின்
மனக் குமுறல்களை
வாய்விட்டு கதறியது
கன்னக்காட்டு மழையோடு !

விதையாக, தழையாக,
காயாக, கனியாக
உணவாகிறேன்,
உண்டு களி(ழி)த்தபின்
மலமாகி எருவாகிறேன் !

ஆடு, மாடு, மனுச
தடை மீறி வளர்ந்தால்
வியர்வைக்கு விருந்தளிக்கும்
வெயில் தாங்கும் நிழலாகிறேன்,
அமர, அமர்த்த, சாய, படுக்க என
உயிர் தொலைந்தும்
உடல் கொண்டு
உதவித் தொலைக்கிறேன் !

தலைக்கெல்லாம் தலையாய்
மனித செல்களின் - ஒரே
உணவாம் உயிர்வளியை
வடிகட்டி வார்த்தெடுத்து

மேலும்

நன்றி அய்யா :) 25-Oct-2017 3:57 pm
ஆறறிவு சிந்தனையில் எத்தனை பிளவுகள் ஒவ்வொரு மனிதனும் ஒரு ரகம். விரல் விட்டு எண்ணும் மனிதர்கள் வாழ்க்கையை இயற்கையோடு பேணி வாழ்கிறார்கள் ஆனால் பலர் அழிவில் இலாபம் கண்டு அதன் மூலம் வாழ்வாதாரம் அமைத்துக் கொள்கின்றனர் இதனை என்னவென்று சொல்வது.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Oct-2017 9:58 am
உடல் தானம் செய்த அம்மரம் - நாற்காலியாகி உட்கார்ந்து கொண்டது, உயிர் மட்டும் தாவி சொர்க்கம் சென்று கடவுளை தேடியது ! கக்கத்தில் ஆக்சிஜன் குடுவை சுமக்கும் காலம் வெகுதூரம் இல்லையென எப்படிப் புரியவைப்பேன் ? ----உண்மை ; அருமை 19-Oct-2017 6:38 pm
முனைவர் இர வினோத்கண்ணன் அளித்த படைப்பில் (public) vellurraja மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Nov-2016 12:57 pm

பாரொளி முழுதும்
கடைந்து செதுக்கிய
பேரொளிப் புன்னகை
மாவொளி விழிகளுடன் !

தோற்ற எதிரியும்
தொடை நடுங்கி வியக்கும்
வீரத்தின் தோற்றுவாய் - இனி
எப்போது தோன்றுவாய் !

உன் உயிர் தேடி வந்த
கொலையாளி எவரும்
கொன்றது இல்லை
தத்தம் பயம் கூட - ஏன்
நின்றது கூட இல்லை
உன் நிழல் அருகில்கூட !

உன் சிந்தனைத் துளிகள்
பெருகிப் பெருங்கடலென
எதிரிகள் காட்டில்
தீயெனப் பற்றினாலும்,
உன் எல்லைக்குள்
சர்க்கரை வார்த்தது !

எமனுக்காய் அழைத்துவிட்டு
ராணுவக் காலனியின்
கடைசி முடிச்சை - பெரு
மூச்சிழுத்து முடித்திருப்பாய் !

பணக்காரனாக பிறந்தாய்
கோடிகளில் இதயம் வென்று
மாவீரனாய் இரு

மேலும்

நன்றி அண்ணா :) 29-May-2017 2:06 pm
வீரத்தின் தோற்றுவாய் - இனி எப்போது தோன்றுவாய் ! ---------------------------------------------- அருமை அருமை தம்பி..! 27-Nov-2016 5:34 pm
மிக்க நன்றி ! 27-Nov-2016 3:54 pm
"வீரம் காக்கும் மரமொன்று விழுந்து இளைப்பாறுகிறது " அருமையான வரிகள் நட்பே 26-Nov-2016 1:19 pm
முனைவர் இர வினோத்கண்ணன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jun-2016 12:17 pm

கசாப்பு கடை ஆடுகளை
பற்றிய கவிதை தாங்கிய
தாளொன்றை உண்ணாது
கடந்தன குட்டிகள்...

அதே தாளை கிழித்து
வடை குடித்த எண்ணெய்யை
குடிக்க பணித்தான்
வெட்டும் இடைவெளியில்
கசாப்பு கடைக்காரன்

எழுதியவன் நாவிற்கு
கொழுப்புக் கறி பிடிக்குமென்று
தேர்ந்தெடுத்து தட்டிட்டாள்
இல்லாள் இருமுறை

கடைசி வரை
நமக்காக போலியாகக்கூட
இறக்கப் படுவார்கள் என்
தெரியாமலேயே இறந்த
ஆட்டிற்கு என் இரங்கல்கள் !


- வினோதன்

மேலும்

நன்றி நண்பரே ! 10-Jun-2016 5:35 pm
சைவமும் அசைவத்தால் தான் முறிவடைகின்றன..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jun-2016 5:08 pm
சிறப்பு! வாழ்த்துக்கள்! 09-Jun-2016 5:08 pm

சிறையில் பிறந்த
சிறையில் வளர்ந்து
சிறையில் இறந்த
அப்பாவி கொரில்லாவின்
மரண வாக்குமூலம் !

ஹரம்பி என் பெயர்,
சேர்ந்து இழுப்போம்
என்பது பொருள் - ஆம்
சேர்ந்து தான் இழுத்தீர்கள்
என்னுயிரின் வேரை !

பதின்ம வயதாம் பதினேழில்
இன விருத்திக்காக
வேரோடு பிடுங்கி
வேறிடம் நட்டீர்கள்,
பெண்டிர் இரண்டோடு !

நீங்கள் அளித்த உணவை
விரும்பியோ விரும்பாமலோ
சேர்ந்தே தின்று செரித்தோம்,
மிருகக் காட்சி சாலையெனும்
றெக்கையழிப்பு சிறைகளில் !

நீங்கள் விரும்பிய
உணவளித்து - குளிப்பாட்டி
உங்களை - ஒரு கூட்டில்
சுதந்திரமாக அடைத்தால்
உயிர் வாழ் இயலுமா
சொல்லுங்கள் ஆறறிவிகளே !

அதுவ

மேலும்

நன்றி தோழர் ! 03-Jun-2016 4:02 pm
அண்மையில் நடைபெற்ற ஒரு காட்சியை கவியாக்கி உள்ளீர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Jun-2016 7:28 am

வா
வந்து
வலஞ்சுழி
முத்தம் தா !

தா
தந்து
எனக்காய்
சுவாசித்துப் போ !

போ
போய்
கிறுக்கு
இதயத்தில் பா !

பா
பாவில்
காமம் தாண்டிய
காதல் மோ !

மோ
முகர்ந்து
அணி மகிழ்வுற
மனதில் நூ !

நூ
நூத்து
கலவாமல் கலந்து
நம்மை ஞா !

ஞா
இரண்டற
சாவி தொலைந்து
தூரம் போ !

பூ
பூத்து
சொர்க்கம் தேடி
மீண்டும் வா !

மேலும்

மிக்க நன்றி அண்ணா...தங்கள் கருத்துகள் எனது முதல் கவிதையில் இருந்தே தந்து வருவதற்கு மிக மிக நன்றி அண்ணா ! விழாவிற்கு தாங்களும் வந்ததாக கேள்விபட்டேன்...அனைவரையும் சந்திக்க முடியாதது மிகவும் வருத்தமே :( 24-Oct-2015 6:59 pm
மிக்க நன்றி சகோ ! 24-Oct-2015 6:58 pm
அருமை...வினோத். வெகு நாட்களாகி விட்டது உங்களைத் தளத்தில் சந்தித்து. வழக்கம் போலவே கவிதை அருமை. வாழ்த்துக்கள் வினோத். 24-Oct-2015 5:49 pm
இதமான வரிகள் 24-Oct-2015 5:35 pm
நிலாசூரியன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
12-Jul-2015 9:15 pm

நாப் பறையறைந்து
நாற்றிசையும் முழவறைந்து
உள்ளே உறங்கும் சிறுத்தையை உசுப்பிவிடு - தம்பி
உயர்வுத் தாழ்வு பேதம் நீக்கிவிடு

திரைபோ லெழுச்சி கொண்டு
திமிரொடு நிமிர்ந்து நின்று
தமிழர்தம் மரபை நீயும் மார்பிலேந்து - தம்பி
தலைக்குமேல்த் தமிழைத் தாங்கி சமரில்நீந்து

நெடியவன் தமிழனென்று
கொடியவன் உணரவில்லை
பொடியவன் புரட்டுகளை புரட்டித் தள்ளு - தம்பி
வடவனின் வஞ்சகத்தை எதிர்த்து நில்லு

மூத்த இனமழித்து
முதல்நம் மொழியழித்து
சாதியும் மதமும் சொல்லிப் பிரித்தவனை - தம்பி
சீர்த்தவன் தமிழனென்றே சிரசுபிடி

பார்குலாம் பரந்திருக்கும்
பைந்தமிழர் நாமே யென்று
பட்டித் தொட்டியெல்லாம்

மேலும்

எழுத்தும் மனிதனும் வேறு வேறு போலும் 25-Oct-2015 1:16 pm
தலைக்குமேல்த் தமிழைத் தாங்கி சமரில்நீந்து நெடியவன் தமிழனென்று கொடியவன் உணரவில்லை சாதித் தமிழ்சாதி மதமும் தமிழேதான் கடவுள்கூட நமக்குத் தமிழல்லோ - தம்பி உடைந்து கிடப்பது நம் பிழையல்லோ...! மிக மிக அருமை அண்ணா ! 25-Oct-2015 11:48 am
மிக அருமை தோழரே.... ஒவ்வொரு தம்பி வரும்பொழுதும் பாடலில் ஒரு வீர உணர்ச்சி கிளறப்படுகிறது.. தம்பிக்கு பின்னால் ஒவ்வொரு பத்தியின் கடைசி வரியும் நிமிரச் சொல்கிறது.. அருமை தோழர்.. 13-Jul-2015 4:19 pm
சாதித் தமிழ்சாதி மதமும் தமிழேதான் கடவுள்கூட நமக்குத் தமிழல்லோ - தம்பி உடைந்து கிடப்பது நம் பிழையல்லோ...! இந்த வரிகளில் உடைந்து போகிறது மனசு. மிக நன்று நிலா. 13-Jul-2015 2:44 am
முனைவர் இர வினோத்கண்ணன் அளித்த படைப்பை (public) சுதா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Feb-2014 8:39 pm

விழியோரம் விழுந்து
கிடக்கும் வினாக்களோடு,
கடந்து நடக்கும் - அழுக்கு
பிஞ்சுகள் என்றாவது
உம் மனம் பற்றியதுண்டா ?

வற்றிய வயிறோடு
கடவுளர் குடியிருப்பின்
கதவோரம் - கந்தல் உடுத்தியபடி
அம்மாவென உச்சரித்தபடி
நிற்கும் யாரேனும் - உம்
கால்களை நிறுத்தியதுண்டா ?

தடதடக்கும் புகை வண்டியின்
வயிற்றில் நின்றுகொண்டு
தொண்டை திண்டாட நின்றாடி
கானம் உதிர்க்கும் - பாரையிதுவரை
பார்த்திரா பாமரர்கள் யாரேனும்
உம் பார்வைக்குள் வந்ததுண்டா ?

ராட்சத ராட்டினங்களின்
காலடியில் நின்றபடி
பஞ்சுமிட்டாய் தின்றுதிரியும்
பிஞ்சுகளை - வெறித்தபடி
கையேந்தும் முகங்களில்
ஒன்றாவது - உம் கனவுகளின்

மேலும்

மிக்க நன்றி தோழி ! 14-Feb-2014 6:20 pm
''பிச்சையை தொழிலாக்கி உண்டு கொழிக்கும் நூறை விட்டுவிடுங்கள் ! பசியால் நுரை தள்ளும் உயிர்களை மட்டும் எண்ணிப் பாருங்கள் ! நீங்கள் நிராகரிக்கும் யாரேனும் உண்மையான பசியோடும் நிற்கலாம் - பசி அக்கண்வழி நீராகலாம் - இருந்தும் உதவா பழிக்கு நீராளாகலாமா? '' இதுதான் கவிஞனின் சிந்தனைத் தெளிவு! வார்த்தை வித்தகனின் எண்ணக் குடுவைக்குள் கிடக்கும் தமிழ் எழுத்துகளை குலுக்கி எடுத்தால் ஒரே எழுத்தைக் கொண்ட எத்தனை அழகிய அர்த்தமான சொற்கள்??? பாரையிதுவரை பார்த்திரா பாமரர்கள் பார்வைக்குள் நூறை நுரை நீராகலாம் நீராளாகலாமா ? அழகிய சொல்விளையாட்டு! 14-Feb-2014 11:59 am
மிக்க நன்றி தலைவா ! அடிக்கடி கருத்து தர வா ! ;) 13-Feb-2014 4:42 pm
பயங்கரமா இருக்கு தலைவா 13-Feb-2014 4:28 pm

இறைவனை வேண்டி
வேண்டுதல்கள் வீணானபின்
இரை வேண்டி இரையாகும்
விலைமகள் பேசுகிறேன்,
காது கொடுங்கள் - கொஞ்சம்
கதைத்துவிட்டு தருகிறேன் !

கா"ரண"ங்களும்
மா"ரண"ங்களும்
உண்டெனுக்கு - வலிகள்பல
உண்ட எனக்கு !

விழுந்தேன் - எழவே
முடியாத ஆழத்தில்,
மாண்டு போவதைத்தவிர
மீண்டு போக வழியின்றி !

நான் படும் வேதனைகளை
கண் கொண்டு பார்க்க
இதயபலம் இல்லாத
செந்தழல் சூரியன்
காரிருருள் கரைந்து போவான் !

சாக்கடையைவிட கீழாக
எனநோக்கும் சமூகம்
தன்னுள் எத்தனை - என்
வாடிக்கையாளர்களை
சுமந்து நிற்கிறதென்பது
நானும் நானுமே
அறிந்த இரகசியம் !

பணமே என் நோக்கமெனில்
கல்லுடைத்து பிழைத்தி

மேலும்

மிக்க நன்றி தோழி! 13-Feb-2014 2:58 pm
மிக அருமையான படைப்பு தோழரே! 13-Feb-2014 2:34 pm
மிக்க நன்றி தோழி...நீங்கள் சாதாரண தேவியாக தெரியவில்லையே... ;) 13-Feb-2014 2:21 pm
மிக்க நன்றி அக்கா ! 06-Jan-2014 4:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (398)

இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (398)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு

இவரை பின்தொடர்பவர்கள் (398)

arulezhil

arulezhil

chennai
suriyan

suriyan

chennai
user photo

erodeirraivan

ஈரோடு

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே