மணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மணி
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  12-Nov-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jun-2016
பார்த்தவர்கள்:  578
புள்ளி:  168

என் படைப்புகள்
மணி செய்திகள்
மணி - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2018 5:50 pm

கரிசல் காட்டு
மண்ணாய்

கானக் குயில்களின்
கீதமாய்

மருண்டோடும் மானின்
மிரட்சியாய்

மலையருவி
வீழ்ச்சியாய்

செங்காந்தள்
மலர்களின்
கூட்டமாய்

கைதேர்ந்த
தொழிலாளியாய்

காகிதத்
தாள்களின்
உரசலாய்

கண்ணில்
இருக்கும்
கருவிழியாய்

தேனை முகர்ந்திடும்
தேனீக்களின்
கூட்டமாய்

பாய்ந்தோடும்
நதிகளின்
ஆரவாரமாய்

துள்ளிக்குதித்து
விளையாடும்
மீன்களாய்

பனியை
தணிக்கும்
போர்வையாய்

பூவில்
இருக்கும்
மகரந்தமாய்

வானில்
உலாவரும்
வெள்ளை
நிலவாய்

என்னவென்று
சொல்வேன்
எப்படிச்
சொல்வேன்

பார்க்கும்
இடமெல்லாம்
பரிணமிக்கிறாய்

அலைய
வைக்கிறாய்
அடிமையாய்

மேலும்

மிக்க மகிழ்ச்சி! தங்கள் பார்வைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!! 04-Jan-2019 10:16 am
காதல் கவிதை அழகு... வாழ்த்துக்கள் மேடம்... 04-Jan-2019 9:36 am
மிக்க மகிழ்ச்சி நன்றி தோழமையே 30-Dec-2018 11:24 pm
மிக்க மகிழ்ச்சி! தங்கள் பார்வைக்கும் கருத்துப் பதிப்பிற்கும் மிக்க நன்றி கவிஞர் கவின் 30-Dec-2018 11:22 pm
உதயசகி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Dec-2017 12:07 pm

.....மொழிகளற்ற பக்கங்கள்.......

பல நாட்களாய் வெற்றிடங்களாய்
கிடந்த என் பக்கங்களை புரட்டிட ஆரம்பித்தேன்,
மொழிகளற்ற காகிதங்கள் எல்லாம்
விழித்துளிகளால் நிரம்பிக் கிடந்தன...

அதில் ஓர் துளியினை எடுத்து
உற்று நோக்கினேன்
சொல்ல முடியாத பல கதைகள் அங்கே
மௌனமாய் விழிகளின் வியர்வைத்
துளிகளை சிந்திக் கொண்டிருந்தன...

வருடத்தில் கடந்த பல நிகழ்வுகள்
உள்ளத்தை உடைத்த சில நினைவுகள்
உறங்காமல் கழித்த தினப் பொழுதுகள்
இருதயத்தைச் தொட்டுச் சென்ற
காலத்தின் வண்ணங்கள் என்று
அதில் சிதறிக் கிடந்த ஒவ்வொரு
துளிகளுக்குள்ளும் அகராதி காணாத
பல வார்த்தைகள் ஒளிந்து கொண்டிருப்பதை
என்னால் உணர்ந்து கொள்ள மு

மேலும்

மறைந்த நினைவுகளும், மலர்ந்த நினைவுகளும் இங்கே மீண்டும் உதிக்கிறது காதலின் மூலதனமாய்! சிறந்த கவி! வாழ்த்துக்கள் தோழமையே! 24-Dec-2018 10:26 pm
இனிதான நன்றிகள் நண்பரே! 04-Apr-2018 4:31 pm
அருமை !...மனதை தொட்ட வரிகள் 31-Mar-2018 3:51 pm
கருத்திலும் வருகையிலும் மகிழ்ச்சி...மனதினிய நன்றிகள் தோழி! 09-Jan-2018 6:05 pm
உதயசகி அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Jun-2018 12:02 am

நான் எழுதிய கவிதைகளின்
காகிதங்கள் மொத்தமும் நீயாக,
உனை வரையும் கவிக்கோலாகவே
நானும் உருமாறிப்போனேனே...

நீ இசைத்த வரிகளின்
ஸ்வரங்கள் மொத்தமும் நானாக,
எனை மீட்டும் கைவிரல்களாய்
நீயும் உருமாறிக் கொண்டாயே...

நான் வரைந்த ஓவியங்களின்
வண்ணங்கள் யாவும் நீயாக,
உனைத் தீண்டும் தூரிகையாகவே
நானு உருமாறிப்போனேனே...

நீ பார்த்த பார்வைகளின்
விழிகள் இரண்டும் நானாக,
எனை முத்தமிடும் இதழ்களாய்
நீயும் உருமாறிக் கொண்டாயே...

நான் சேகரித்த இரவுகளின்
கனவுகள் அனைத்தும் நீயாக,
உனை அணைக்கும் காதலாகவே
நானும் எனை மாற்றிக் கொண்டேனே...!

மேலும்

காதல் கொண்ட மனதின் வரிகள் அருமை ! வாழ்த்துக்கள் 09-Mar-2019 6:15 pm
கவியும், கற்பனையும் மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள் தோழமையே. 24-Dec-2018 9:59 pm
இனிய நன்றிகள்! 19-Jun-2018 12:17 pm
Nanru 15-Jun-2018 10:39 pm
இராசேந்திரன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Aug-2016 9:14 pm

இன்று கவிதை எழுத
சற்று தாமதம்.

அவள் வரவேண்டிய பேருந்தில்
ஏதோ நேரக்குளறுபடி...!

மேலும்

உங்கள் கருத்தே ஒரு கவிதையாகி விட்டது. வாழ்த்துக்கு நன்றி தோழரே. 17-Aug-2016 2:25 pm
அவள் வருகைக்காக காத்திருப்பது காதலுக்கு அழகு...! வார்த்தையை தேடிப்பிடிப்பது கவிதைக்கு அழகு! வாழ்த்துக்கள்..! 16-Aug-2016 8:29 pm
தாமதமானாலும் தனியொரு அழகோடு படைப்பாகிவிட்டது. நன்றி தோழரே. 09-Aug-2016 9:22 am
தாமதம் என்பது எதிலும் தடையே ! 08-Aug-2016 1:36 pm
மணி - கீதா பரமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2016 6:11 pm

உன்னை கண்ட நொடிதனில்
பூவுக்குள் ஏனோ ஒரு பூகம்பம்...
என் மனதுக்குள் கண்டேன்
ஓர் பிரளயம்...!

மழையற்ற நாளின்
வானவில்லாய்....
என் மனதோடு வந்தாய்
வண்ணங்களாய்...!

எங்கேயோ ...
தொலைத்த என்னை
தேடிப்பார்க்கிறேன்....
உன் விழி வழியே...!

என் கவிதையில் சொல்லா
காதலை...
உன் கண்களால்
சொல்லி சென்றாயடா...!

வன்முறை ஏனடா புரிகிறாய்...?
உன் வார்த்தைகளற்ற மௌனங்களால்...!

தனிமையும் என்னை வெறுத்ததே ...
உன் நினைவுகள்
என்னோடு த(தே)ங்கியதால்...!

மரணம் கடந்திட வேண்டுமடா...
மனதோடு நீயும் வாழ்வதனால்...!

- கீதா பரமன்

மேலும்

மிக்க நன்றி தோழமையே... 02-Oct-2017 7:54 am
மிக்க நன்றி தோழமையே... 16-Aug-2016 7:34 pm
வானவில் போல் உன் வார்னைகளும் அருமை 16-Aug-2016 7:28 am
உண்மையான காதலுக்கு (வாழ்விற்கு) மரணம் இல்லை! 15-Aug-2016 9:29 pm
உதயசகி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Aug-2016 2:00 pm

அவள் மட்டும் காமப்பொருளா

தன்னை
பெற்றவளுக்கு
மகனாய்
தன்னிலும்
மூத்தவளுக்கு
காவலனாய்
தன்னிலும்
இளையவளுக்கு
தமையனாய்
தன்னையே நம்பி
வந்தவளுக்கு
கணவனாய்
இருப்பவன்
ஊரான் வீட்டுப்
பெண்ணிற்கு
மட்டும்
ஏனடா
காமுகனாகிப்
போனாய்.......??

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன் நன்றிகள் தோழரே...... 07-Aug-2016 6:20 am
உண்மைதான்..உலகத்தில் போலியான வேடம் போடும் மனிதர்கள் தான் ஏராளம் 07-Aug-2016 6:15 am
கருத்தால் மனம் மலர்ந்தேன் நன்றிகள் தோழமையே......... 05-Aug-2016 4:07 pm
சிந்தைக்கு உரமூட்டும் சிந்தனைகொண்ட படைப்பு! விடையங்கள் இல்லா புதிர் இறைவன் படைத்த இயற்கையதனில்! இயல்பு என்பதொன்றே! வன்செயலுக்கு முதற்காரணம்! முக்கிய ஆயுதம்! வாழ்த்துக்கள் தோழமையே! 05-Aug-2016 4:04 pm
மணி - joதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Aug-2016 1:23 pm

அடுத்தவன் தோட்டத்தில் காய்த்து தொங்கும்
மாங்காயை எண்ணி தினமும் பார்த்து ஏங்குவதுபோல்

அவளது அன்பை பெற தினமும் கோடி
ஏக்கங்கள் நான் கொள்ள வேண்டும்

அவளது முகத்தினை எண்ணி பல நாள் தூக்கங்கள்
நான் தொலைக்க வேண்டும்

என் முன்பு அவள் மினுக்கி செல்லும் அழகினை
வருடங்கள் கடந்து ரசிக்க வேண்டும்

அவளுடைய திமிரில் என்றும்
நான் தோல்வி காண வேண்டும்

அவளது அழகினை கண்டு ஆண்களுக்கு
மட்டுமல்ல
இவளை மணக்க நாமும் ஆணாக
பிறந்திருக்கலாமோ என்ற எண்ணம்
பெண்ணுக்கும் எழ வேண்டும்

எனது காதலை அவள் ஏற்கும் முன்
அவளது அழகினை சொல்லி நான்
ஒரு கவிஞன் ஆக வேண்டும்

அவளது முத

மேலும்

அன்பின் உச்சம் காதல் காதலின் உச்சம் அதன் வலி வரும் வரிகள் ....அருமையான வரிகள் கற்பனை காதல் தலைப்பில் உண்மை காதல் தெரிகிறது .. 05-Aug-2016 6:50 pm
காதல் துளிர்ந்த ஒவ்வொரு இதயத்திலும் கவிதை ஒளிரும்! அருமையான உணர்ச்சிபூர்வமான வரிகள்! வாழ்த்துக்கள் தோழமையே! 05-Aug-2016 3:48 pm
தங்களின் பொன்னான கருத்துக்கு நன்றி தோழரே 05-Aug-2016 2:07 pm
அழகான காதல் வரிகள். அவள் வந்து விட்டால் இதயத்தில் வர்ணனை அவள் வருகையின் காத்திருப்பில் இதயம் சாதனை... வாழ்த்துக்கள் .... 05-Aug-2016 2:03 pm
மணி - அருண்வேந்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Aug-2016 12:41 pm

ஆணிப்பொன் நிலவே
ஆரா என்னமுதே...
தேயும் பிறையொளியின்
மங்கா மாச்சுடரே...
மயிலும் மதியிழக்கும்
துயிலும் விழி மறக்கும்
மானே நீ கடந்தால்
மஞ்சம் சிறகடிக்கும்
புரவியும் திசை மறக்கும்...!
நௌவி நின் வடிவில்
மௌவலும் விழையும்
இந்த யௌவனம் பொருள்கொள்ளும்...!
-அருண்வேந்தன்

மேலும்

மிக்க நன்றி தோழரே 05-Aug-2016 3:49 pm
கவிகளில் படர்ந்த அழகிய தமிழ் மகள் அற்புதம்! வாழ்த்துக்கள் தோழமையே! 05-Aug-2016 3:42 pm
மிக்க நன்றி தோழரே 05-Aug-2016 2:33 pm
இனிமையான வரிகளில் தமிழ் மகள் சிலிர்த்திட்டாள். வாழ்த்துக்கள் ..... 05-Aug-2016 2:09 pm
மணி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
01-Aug-2016 11:16 pm

இது வெண்மை காகிதமல்ல!
அழகு மந்திரத்தின்...
அச்சு பொறிக்கப்பட்ட...
தங்கத்தகடு!

மேலும்

வெறும் நகல்மட்டுமே இது! அசல் உள்ளத்தில் அல்லவா அச்சிடப்பட்டுள்ளது! ஆதலால் திருடுபோவதற்கு வாய்ப்பில்லை நண்பரே! மிக்க நன்றி நண்பரே! தங்கள் வரவிலும், கருத்திலும் மேலும் ஊக்கமடைந்தேன்! 10-Aug-2016 10:32 pm
மிக்க நன்றிகள் தோழியே! தங்களது வரவிலும், கருத்திலும் மேலும் ஊக்கமடைந்தேன்! 10-Aug-2016 10:28 pm
யாராவது திருடி விடப் போகிறார்கள் 09-Aug-2016 4:48 pm
தமது கைவண்ணத்தில் அழகு மங்கை அழகோவியம்.... 09-Aug-2016 10:12 am
மணி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
01-Aug-2016 10:37 pm

வெற்றுக்காகிதத்தில்...
கொட்டிய வெள்ளிநிலவு!
கருப்பு உதடு தீட்டிய...
பகல்கனவின் காதல்...
முத்தங்கள்!

மேலும்

ஓவியத்திற்க்கு உங்கள் விரல்கள் இசைகிறது ... தொடரட்டும் இசை .... 10-Jun-2017 6:44 pm
தங்கள் வரவிலும், இனிமையான கருத்திலும் உளம் மகிழ்ந்தேன்! தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் நண்பரே! 10-Aug-2016 10:26 pm
தங்கள் வரவிலும், இனிமையான கருத்திலும் உளம் மகிழ்ந்தேன்! தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் தோழியே! 10-Aug-2016 10:25 pm
மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2016 10:20 am

தேகமெல்லாம் காலம்...
கோலமிட்ட வடுக்கள்!
முகமெல்லாம் தோல்விகள்...
முத்தமிட்ட பருக்கள்!

தீராத்தாகமாய் மனதினை...
ஆழ்த்தும் சோகம்!
எனதுடலோ! துன்பத்திற்கு...
இறைச்சியின் மோகம்!

நெஞ்சத்தில் எழும்...
வினாக்களோ! ஆயிரம்!
வாழ்வினில் காணும்...
கனாக்களோ! வெற்றுக்காகிதம்!

துளிர்க்கும் துளிஇன்பத்தினை...
தூக்கிலிடும் துக்கம்!
அரிக்கும் துன்பம் ஆறடி...
தோண்டுது பக்கம்!

சலசலக்கும் சஞ்சலங்கள்...
சங்கமிக்கும் நெஞ்சம்!
சந்திசிரித்து சமாதானமாகி...
உறங்கும் கொஞ்சம்!

அனுதினமும் ஆட்க்கொண்ட
கவலையே அறுசுவை விருந்து!
ஊமைக்காயங்கள் விதையூன்றிய...
மனதிற்கு அன்னை உறவே...
பல்சுவை மருந்து

மேலும்

தங்கள் வரவில் அகம் மகிழ்ந்தேன்! தங்களின் இனிமையான கருத்தால் நான் மேலும் ஊக்கமடைந்தேன்! தங்களின் வரவிற்கும், அழகான கருத்திற்கும் எனது கோடான கோடி நன்றிகள் அய்யா! 04-Aug-2016 8:24 pm
மிகவும் அருமை வார்த்தைகள் இல்லை வாழ்க்கை தத்துவங்கள் வரிகள் இல்லை வந்து சென்ற நிகழ்வுகள் உங்கள் எண்ணங்கள் உலவிடும் உள்ளச் சுவடுகள் 04-Aug-2016 5:41 pm
உண்மைதான் அய்யா! தங்கள் வரவில் மனம் மகிழ்தேன்! தங்களின் இனிமையான கருத்திற்கும், பகிர்ந்தமைக்கும் எனது கோடான கோடி நன்றிகள் அய்யா! 04-Aug-2016 3:52 pm
நல்லவரின் வாழ்க்கை பூலோக நரகத்தில் பிறர் நலங்கெடுத்து வாழ்பவர்க்கு இப்பூலகமே சொர்க்கம் தான். இது விதியல்ல; சுயநலம் ஒன்றையே கொள்கையாகக் கொண்டு ஏமாற்றிப் பிழைப்பவர் செய்யும் சதி. அருமையான படைப்பு கவிஞரே. 04-Aug-2016 2:02 pm
மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2016 1:19 am

பெண்ணே! நீ!
பார்த்ததென்னமோ!
ஒருமுறை தான்!
ஆனால்! என்னுள் விளைந்தது?

உடலின் வானிலையில்
வரம்புமீறிய வர்த்தகப் பிழை!
மனதின் கடலினுள் ஓயாமல்...
ஓங்கி அறைந்திடும் பெரும் அலை!

உருக்குலைந்த உடலில்...
உறியடி விளையாடும் உயிர்!
ஒடுக்கடைந்த கன்னத்தில்...
ஊஞ்சலாடும் மரணத்தின் நிழல்!

உள்வாங்கிய கண்களில்...
உப்புமண்டி படர்வித்த வலிகள்!
விடியாத இரவினில் தொலைந்த...
விழியினைத் தேடும் விதவை இமைகள்!

இனிய கானங்களும்...
மரண ஓலங்களாக செவிமடல்தனில்
ரிங்காரமிடுகின்றன!
நாவினில் தேன்வார்த்திடும் தமிழும்...
தள்ளாட்டம் கொண்டு பிதற்றுகின்றன!

கோடிக்கணக்கான செல்களில்
நுன்பிம்பத்தின் கோலம

மேலும்

தங்கள் வரவில் அகம் மகிழ்ந்தேன் தோழியே! தங்களின் அழகான கருத்திற்கும், வரவிற்கும் எனது பலகோடி நன்றிகள் தோழியே! தங்களின் கருத்து என்னை மேலும் ஊக்குவிக்கின்றன... 03-Aug-2016 11:24 am
அழகான வரிகள் தோழரே......உங்கள் வரிகள் என் மனதை வருடின மயிலிறகாய்..... 02-Aug-2016 8:05 pm
தங்கள் வரவில் அகம் மகிழ்ந்தேன்! தங்களின் அழகான கருத்திற்கும், பகிர்ந்தமைக்கும் எனது கோடான கோடி நன்றிகள் அய்யா! 31-Jul-2016 5:59 pm
பார்வையில் ஆயிரம் காவியங்கள் பாவை இவளின் விழிகளே! 31-Jul-2016 5:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (64)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (64)

இவரை பின்தொடர்பவர்கள் (65)

இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு
மேலே