joதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  joதி
இடம்:  விருதுநகர்
பிறந்த தேதி :  19-Mar-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Nov-2015
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  18

என் படைப்புகள்
joதி செய்திகள்
joதி - joதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2023 7:30 pm

எனை உன் வார்த்தைகளில் கூட

வதைத்து விடு
        ஆனால்
உன் மௌனத்தில் மட்டும் 
கொன்று விடாதே .........

மேலும்

joதி - எண்ணம் (public)
28-Mar-2023 7:30 pm

எனை உன் வார்த்தைகளில் கூட

வதைத்து விடு
        ஆனால்
உன் மௌனத்தில் மட்டும் 
கொன்று விடாதே .........

மேலும்

joதி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2019 5:32 pm

வாய்ப்பு வாழ்வில்
ஒரு முறை மட்டுமே வரும்
அதை சரியாக உபயோகித்தால்
உலகம் உன்னை மதிக்கும்
இல்லையேல் வார்த்தைகளில்
உன் மதியை மிதிக்கும்......

மேலும்

joதி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2019 5:31 pm

ஆழ்கடலில் இருந்து
கரைக்கு வந்தால் தான்
வெற்றி
என்று இல்லை அங்கு
எதிர்நீச்சல்
போட நினைப்பதே வெற்றி தான்.....

மேலும்

joதி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2019 5:30 pm

மற்றவர் காலில் நான் விழும் போது
என் சிரம் இம்மண்ணையே
நோக்கி கொண்டு இருக்கிறது
ஆனால்
ஆசிர்வதிபவர் சிரமோ என் முதுகை
நோக்கி கொண்டு இருக்கிறது

ஆசீர்வதமோ ஆத்திரமோ
அதை முகத்திலே காட்ட வேண்டும்

என் தமிழ் அன்னையிடம் கற்ற
முதல் பாடம்
எனவே
நான் மற்றவர் காலில் விழும் போது எனக்கும் அசிங்கம் இல்லை

என் காலில் மற்றவரை விழ
வைப்பதே அசிங்கம்

மேலும்

gowthami அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Mar-2015 11:06 am

****பிரபஞ்ச தேடலில்
முற்றும் விளங்கா அறிஞன் போல்
உந்தன் தேடலில்
அந்தம் பெறாமல் ஓய்கிறேன்!

****கரை தழுவும் அலை போல்
வீசி வீசி மாய்கின்றன
ஆழி மனதுக்குள்
உந்தன் நினைவுகள் !

****கண்ணில் வந்த நோயாய்
எந்தன் பார்வை எல்லாம் நீயாய்
அங்கிங்கெனாத படி எங்குமாய்
யாவையுமாய் நீயே!

****வரமாய் வேண்டும் ஒரே ஒருநாள்
உன் நகத்தின் அழகை முழுதும் ரசிக்க
ஆயுட்கால ஜெபமாய்
உந்தன் பெயரே வேண்டும் !

****உயிர் அடங்கும் நேரத்தில்
என் கண்மணிக்குள் நீ வேண்டும்
நம் காதல் வாழ்வு இது
கடைசி வரை வேண்டும்!

மேலும்

நீங்கள் தமிழ் மேல் வைத்த அன்பு உங்கள் வரிகளில் தெரிகிறது. 29-May-2020 8:44 am
அருமை 31-Aug-2018 7:23 pm
வார்த்தைகள் அழகு!! 20-Aug-2018 1:28 pm
தொடரட்டும். சிறப்பான படைப்பு. 13-Oct-2016 4:01 pm
உதயசகி அளித்த கேள்வியில் (public) Uthayasakee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Aug-2016 7:13 pm

புகுந்த வீட்டில் ஏன் ஒரு மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றது....???
உங்கள் பார்வையில் ஒரு மாமியார்-மருமகள் எவ்வாறு இருக்க வேண்டும்....??
உங்களது கருத்துக்களை பகிருங்கள் தோழர்களே.....!!

மேலும்

உண்மையான கருத்து....கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன் என் இனிய நன்றிகள் தோழி.... 28-Aug-2016 12:09 pm
உண்மைதான்.....கருத்தளித்தமைக்கு என் இனிய நன்றிகள் தோழி.... 28-Aug-2016 12:09 pm
அவள் அம்மாவாக நினைப்பது இல்லை இவள் மகளாக பார்ப்பதில்லை 20-Aug-2016 3:48 pm
ஏன் மாமியார் மருமகள் சண்டையை மட்டும் இந்த சமூகம் பெரியதாகப் பார்க்கிறது என்று புரியவில்லை . ஏன் ஒரே வீட்டில் பிறந்த சகோதரிகள் , அம்மா மகள் பிரிவினைகள் , இவைகளும் நம் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியே இது பெரிய விஷயமானாலும் அவரவர் தஙகள் தஙகள் விருப்பப்படி அவரவர் வழியில் செல்லலாமே . ஒருவரை ஒருவர் அடக்க நினைப்பதும் , மாற்ற நினைப்பதும் இதற்கு காரணம் தோழி ! அதை நிறுத்தினாலே இந்த சண்டைக்கு வேலையில்லாமல் போய்விடும் . இதற்கு கணவன் வரவேண்டும் என்று நினைத்தால் அது இன்னும் பெரிதாகுமே தவிர தீர்வு ஏற்படாது. 15-Aug-2016 4:44 pm
உதயசகி அளித்த கேள்வியில் (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Aug-2016 9:41 am

தற்போது விவகாரத்துக்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள்.......??
உங்கள் கண்ணோட்டத்தில்.....

மேலும்

மிகவும் சரியான கருத்துக்கள்.....தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என்றென்றும் என் இனிய நன்றிகள்... 28-Aug-2016 12:11 pm
இருவரும் நான் சொல்லும் கருத்தை மற்றவர் கேட்டே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை . சிறிதும் பொறுமை இன்மை . அவசரம் . எதையும் துணிந்து பேசுவது ,செய்வது . ஒருவரை இன்னொருவர் ஏளனம் செய்து தான் தன்னை பெரியாளாக காட்டிக் கொள்வது . ஒருவர் மற்றவரை குறைத்து தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று நினைப்பது . இப்படி பல காரணங்கள் உள்ளன தோழி . இதற்கு , ஒரேவழி சகிப்புத் தன்மையும் , பொறுமையும் மட்டுமே . இவை இருந்தால் இன்று விவாகரத்திற்கு இடமே இருந்து இருக்காது. என்பது என் எண்ணம். 15-Aug-2016 4:31 pm
சரியாக கூறினீர்கள் தோழி.......தங்களது கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் இனிய நன்றிகள்...... 11-Aug-2016 7:10 am
அன்பின் அர்த்தம் மறந்தமையும், உணர்வுகள் மரித்தமையும், திருமணத்தை ஒரு தீர்வாக நினைப்பதுமே ...... 10-Aug-2016 11:17 pm
joதி - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2016 7:40 am

இக் கேள்விக்கான தங்களின் பார்வையிலான பதில்களை பகிருங்கள் தோழர்களே........

மேலும்

காதல் என்பது அவரவர் உரிமை எனலாம். ஆனால் காதலில் காதலிக்கோ,காதலனுக்கோ த்ரோகம் இல்லாமல் இருக்க வேண்டும்…இது பெற்றோருக்கு செய்யும் த்ரோகம் அல்ல…எனினும் அவர்கள் சம்மத்ததோடு திருமணம் செய்து கொள்ள மேலும் சிறப்பு. 25-Sep-2018 4:28 pm
அன்பிற்கு சட்டங்கள் ஏது, நாம் அனைவரும் ஒரு உண்மையை ஆராய்ந்து பார்க்க மறந்துவிட்டோம். என்னவென்றால், எந்த ஒரு பிள்ளையும் தன் பெற்றோர்க்கு துரோகம் இளைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அதே நேரத்தில் நம் பிள்ளையின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்க வேண்டு என்று பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள். ஆக தங்களால் இயலாத பட்சத்திற்கு ஒருவருக்கொருவர் சங்கடமான சூழலை கொடுத்து விடுகிறோம். இப்படி ஒரு சூழல் அமையும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு பிள்ளை தன் காதலை தன் பெற்றோரிடம் சொல்ல வரும்போது அதன் மனது படும் பாடு அதற்க்கு மட்டுமே தெரியும், அதே நேரத்தில் பெற்றோரின் நிலையையும் அறிவர். வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்க போவதை யாரும் விரும்பி நாடுவது இல்லை. ஆனால் இத்தகைய சங்கடமான சூழலை சமாளிக்கும் மனப்பாங்கு இருவருக்கும் வேண்டும். எப்படி பட்ட சங்கடமான சூழலையும் சுமூகமாக மாற்றும் எண்ணம் அனைவருக்கும் வேண்டும். அது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமையும் கூட. நான் பிள்ளைகள் செய்யும் தவறை நியாயப்படுத்துவதற்காக இல்லை, மாறாக தன்னை மீறி தவறு செய்து விடுகின்ற பிள்ளைகளின் இக்கட்டான சூழலை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறேன். பிள்ளைகளின் காதலை அவமானம், தோல்வி என்று நினையாமல் "என் பிள்ளையின் மனதிற்கு பிடித்த இடத்தில் நான் திருமணம் செய்து வைத்தேன்" என்று அனைவரிடத்திலும் பெருமையாக கூறிக்கொள்ள வேண்டும்(முடியாவிட்டாலும்). அதே நேரத்தில் பெற்றோர் தான் தேர்ந்தெடுத்த ஒருவரை வெறுத்து விட கூடாது என்பதிலும் பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும். முடிவு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, சகித்து நடந்துகொள்ள வேண்டும். 29-Sep-2016 7:41 pm
துரோகம் தான், ஏன்/ தன்பிள்ளை தனக்கு மட்டும் சொந்தம் என்று தான் ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள் தங்களுக்கு தெரியாமல் எதுவும்செய்ய மாட்டார்களென்று பிள்ளைகள்மீது முழுநம்பிக்கை அன்பு gவைத்துச்செல்லமாக வளர்க்கிறார்கள் , ஆனால் ஒருசில பிள்ளைகள் துணிச்சல் மிக்கவர்களாகி தன் எண்ணப் படி காதலிக்க தொடங்கி விடுகிறார்கள் ,காதலிப்பது தப்பு இல்லை , நம் பெற்றோர் இதற்கு சம்மதிப்பார்களா அவர்களை மனம் வருந்த பண்ணலாமா /உண்மையான அன்பும் அக்கறையும் பெற்றோர் மீது இருந்தால் நிச்சயமாக பிள்ளைகள் தன் அற்ப ஆசைக்கும் காதலுக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள் 31-Aug-2016 1:57 pm
மிக்க நன்றி தோழி..... 28-Aug-2016 2:26 pm
joதி - கிச்சாபாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2016 1:05 am

காதல் செய்ய
பணம் தேவையில்லை...!

காதல் கொள்ள
அழகு தேவையில்லை...!

காதல் ஏற்க
குணம் தேவையில்லை...!

காதல் கவிதை எழுத
கல்வி தேவையில்லை...!

கண்ணீர் சிந்துகையில்
அதனைத் துடைக்க
கைகுட்டை இருந்தால் போதும்...!

பிரிந்திடுவோம் - என
தெரிந்திருந்தும்....
மலரைச் சுமக்க
மறுப்பதில்லை செடி...!

பிரிவதற்காக
காதலிப்பதில்லை எவரும்...

இணை பிரியாமல்
இருப்பதற்காகத்தான்
விரும்புகிறார்கள் ஒவ்வொருவரும்...!

சூழ்நிலைக்கு கைதியாகி
உடைந்து போகிறார்கள்...!

பிரியும் பூவாக இல்லாமல்
சுமக்கும் செடியாக இருப்பதுதானே...
உண்மையான காதல்...!

மேலும்

உண்மைதான்..ஆனால் காமம் என்பதில் தொடங்கும் உறவுகள் நடக்க நினைக்கும் போதே சரிந்து விழுந்து விடுகிறது 07-Aug-2016 5:35 pm
பிரியும் பூவாக இல்லாமல் சுமக்கும் செடியாக இருப்பதுதானே... உண்மையான காதல்...! அழகு 07-Aug-2016 5:23 pm
தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கு நன்றி சகோதரா..! 07-Aug-2016 1:31 pm
பிரிந்திடுவோம் - என தெரிந்திருந்தும்.... மலரைச் சுமக்க மறுப்பதில்லை செடி...! காதல் வாழ்க்கையின் எதார்த்த உண்மை வரிகளில்... வாழ்த்துக்கள் அண்ணா... தொடருட்டும் கவி பயணம் 07-Aug-2016 6:57 am
joதி - joதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2016 12:15 pm

சீதையின் பொறுமையையும்
கண்ணகியின் கற்பையும்
ராதையின் அழகையும்
ஒரு சேர பெற்றவளே
நீ தான் எம் தாய் மண்ணின்

தமிழ் மகளோ........

பலவகையான வண்ணச் சாயங்கள்
பூசிக்கொண்டு
பாவாடையில் பணிக்குச் செல்லும்
பட்டணத்து பத்மினிக்களுக்கு
நடுவில்
மஞ்சள் நீராடி நெற்றி திலகமிட்டு
ஒற்றை சடையில்
ஒரு சரம் மதுரை மல்லியை
வைத்து கொண்டு
ஆத்துகாரனை பணிக்கு அனுப்பும்
அழகியே

நீ தான் எம் தமிழ் மகளின்

தலை மகளோ..........

நீ எம் தமிழ் மகள்

தலை மகள்

மட்டும்

மேலும்

அருமையாக கவிபாடும் தமிழ் மகளுக்கு வாழ்த்துக்கள்! 04-Aug-2016 10:20 pm
நன்று வாழ்த்துக்கள் 04-Aug-2016 1:05 pm
joதி - joதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2016 3:19 pm

எனது அன்பின் சுவாசகாற்றுக்கு
கிளைகளை போன்று அசைந்தும்

எனது கோப புயலுக்கு
வேர்களை போன்று அசையாமலும்

என் வாழ்வில் என்றும்
எனக்கு நிழலாய் இருப்பவளே


சேலையில் பார்த்தால் எனது
"அன்னையாகவும்"

சுடிதாரில் பார்த்தால் எனது
"தோழியாகவும்"


பாவாடை தாவணியில் பார்த்தால் எனது
"கனவு கன்னியாகவும்"

ஒளிர்பவளே.......


இன்றும் மயக்கத்தில்
இருக்கிறேனடி
உனது அன்பு கலந்த போதையில்....


முத்தத்திற்கு ஏங்க வைக்கும்

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே 08-Aug-2016 12:36 pm
முதல் நான்கு வரிகள் நன்றாக இருக்கின்றன! "கிளைகளை போல அசைந்தும்; வேர்களை போல அசையாமலும்" நன்று!கவிதையில் நல்ல கற்பனை திறன் இருக்கிறது. எழுத்து பிழைகள் அந்த நல்ல அம்சத்தை கெடுப்பதால் அப் பிழைகளை தவிர்க்கவும்.. 'அனு அனுவாக' என்பதை 'அணு அணுவாக' என்று திருத்தவும். 07-Aug-2016 10:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
அருண்

அருண்

இலங்கை
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (11)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

user photo

ஜெகன் ராஜ்

பாளையங்கோட்டை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே