krish vathani - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  krish vathani
இடம்:  srilanka
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Jun-2013
பார்த்தவர்கள்:  192
புள்ளி:  42

என் படைப்புகள்
krish vathani செய்திகள்
krish vathani - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2016 7:43 am

ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிவிட்டு அதற்கு காரணம் அவளது கவர்சியான உடை தான் காரணம் என்கிறார்கள் ஆண்கள்...இது சரியான கருத்தா அல்லது தம் தவறை நியாயப்படுத்துவதற்காக அவ்வாறானதொரு முகமூடியின் பின்னே தம்மை ஒளித்து கொள்கிறார்களா.....??

உங்கள் பார்வையில் இதற்கான கருத்துக்களை என்னுடன் பகிருங்கள் தோழர்களே.........!!

மேலும்

தங்களின் கருத்துக்களும் சரியானவை தான்....கருத்தளித்தமைக்கு என் இனிய நன்றிகள் தோழரே.... 15-Aug-2016 8:48 am
ஒரு பெண் ஒழுக்கமான ஆடை அணிந்தால் மட்டும் ஆண் இனம் கண்ணை மூடிக்கொண்டா இருந்துவிடப்போகிறது...?...........கவர்ச்சி ஆடைகளால் பெண்ணுக்கு கிடைப்பது என்ன? அப்படி அணியாததால் எதை இழக்கப் போகிறார்கள்? ஒரு விளைவை நடத்தி விட்டு, அதன் எதிர்விளைவை கட்டுப்படுத்துவது என்ன நியாயம். பாலியல் வன்கொடுமை என்கிற சமூக அவலத்தை ஒழிக்க வேண்டுமெனில், அதன் காரணிகள் அனைத்தையும் கலைவதுதானே நியாயம். 14-Aug-2016 2:39 pm
உண்மை தான் தோழி.........கருத்தளித்தமைக்கு என்றென்றும் என் இனிய நன்றிகள்............ 11-Aug-2016 7:05 am
செய்திகளை படித்தால் அப்படி தெரியவில்லையே சேலை கட்டிய வயோதிப மூதாட்டியை கூட கொடுமைக்கு ஆளாக்கியதாக படித்த ஞாபகம் .............. 10-Aug-2016 11:25 pm
krish vathani - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2016 9:41 am

தற்போது விவகாரத்துக்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள்.......??
உங்கள் கண்ணோட்டத்தில்.....

மேலும்

மிகவும் சரியான கருத்துக்கள்.....தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என்றென்றும் என் இனிய நன்றிகள்... 28-Aug-2016 12:11 pm
இருவரும் நான் சொல்லும் கருத்தை மற்றவர் கேட்டே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை . சிறிதும் பொறுமை இன்மை . அவசரம் . எதையும் துணிந்து பேசுவது ,செய்வது . ஒருவரை இன்னொருவர் ஏளனம் செய்து தான் தன்னை பெரியாளாக காட்டிக் கொள்வது . ஒருவர் மற்றவரை குறைத்து தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று நினைப்பது . இப்படி பல காரணங்கள் உள்ளன தோழி . இதற்கு , ஒரேவழி சகிப்புத் தன்மையும் , பொறுமையும் மட்டுமே . இவை இருந்தால் இன்று விவாகரத்திற்கு இடமே இருந்து இருக்காது. என்பது என் எண்ணம். 15-Aug-2016 4:31 pm
சரியாக கூறினீர்கள் தோழி.......தங்களது கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் இனிய நன்றிகள்...... 11-Aug-2016 7:10 am
அன்பின் அர்த்தம் மறந்தமையும், உணர்வுகள் மரித்தமையும், திருமணத்தை ஒரு தீர்வாக நினைப்பதுமே ...... 10-Aug-2016 11:17 pm
krish vathani - திருச்செல்வம் எல்லப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2016 10:04 am

வையகத்தில் மலர்ந்த
வண்ண மலர்களின்
வாழ்க்கை வரிகள்..

மரண எல்லையை
மௌனமாய் குறிக்கும்
புள்ளிகளின் சேர்க்கை

காயம் பட்டாலும்
கணல் கொண்டு சுட்டாலும்
கரையாத காலனின்
கல்வெட்டு...

ஜோசிய காரனுக்கு
யோசனை சொல்லும்
முழுமைப்பெறாத கோடுகள்

இறைவன்
நாம் இன்னல்பெற
இட்டுச் சென்ற
கீறல்கள்

சொந்தக்காரனே
அறியமுடியாத
சொல் வரிசைகள்

பிரம்மன் தொடங்கி
விஷ்ணு தொடர்ந்து
சிவன் முடிக்கும்....
மர்மக் கலை..

மேலும்

krish vathani - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2016 12:55 pm

அடுத்தவர் வாழ்வில்
அடிவைக்கும் முன்
சிந்தித்து செயற்படாது - பின்

மனதார மன்னிப்பு வேண்டிடும்
தாங்கள் காரணங்கள் - என்றுமே
ரணத்திற்கு மருந்திடா...

புறக்கணிப்பின் வேதனை
தாங்கள் அறியததா?
காரணங்கள் எதுவானால் தான் என்ன?

இத்தவறுகள் இனி தொடரக்கூடாதவை தான்
தெரிவிக்கப்படததினாலேயே
பல தவறுகள் என்றுமே தப்புக்களாய்.....

மேலும்

உண்மைதான். இது போன்று செய்யும் பிழையில் பலர் வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி விடும். வாழ்த்துக்கள் ..... 02-Aug-2016 1:50 pm
உணராத மனமே மண்ணில் ஏராளம் 02-Aug-2016 7:25 am
krish vathani - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2016 12:49 pm

தாய்க்கு தனயன் அழகு
தந்தைக்கு மகள் அழகு - ஆனால்
தமிழ் மக்களுக்கோ.....
அவர்களின் தாயே!
உலகழகு

மேலும்

நிதர்சனமான வரிகள். வாழ்த்துக்கள் ..... 02-Aug-2016 1:56 pm
kirupa ganesh அளித்த படைப்பில் (public) Jaya Ram Kumar மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Apr-2014 11:16 pm

மகனே ,

உயில் எழுத
பணமில்லை ....

உயிர் என்
உடலிலிருந்து பிரிந்த பின்

சடலத்தை
சங்கு ஊதி

மலர் வளையமிட்டு
மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்க

சாம்பலை கரைக்க
சௌண்டி கழிக்க

செலவுகளுக்கு
சேமிப்பாய் ஒரு தொகையை

சிவப்பு பெட்டியில்
சேர்த்து வைத்து உள்ளேன்

மனம்
பணம் இல்லாமலே எரிந்து முடிந்தது

உடல் எரிய இத்தொகையை
உனக்காக சேமித்தேன் !

சொத்து சேர்த்து வைக்காததால்
செலவு வைக்காமல் செல்ல எண்ணுகின்றேன் !

தகனத்தில் கண்ணீர் விடாதே !
நெருப்பு அணைந்து விடும் .

வறுமையால்
பாரமாய் வாழ்ந்த உனக்கு

இறப்பிலாவது பெரும் பாரமில்லாமல்
பிரிய விரும்பி

மேலும்

அழகாய் உள்ளது நண்பரே 27-Apr-2015 2:43 pm
மிக்க நன்றி பசப்பி 24-May-2014 8:51 pm
அருமையான கவிதை தோழமையே. 24-May-2014 6:13 pm
மிக்க நன்றி கார்த்திக் 18-May-2014 6:38 pm
krish vathani - தர்சிகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jan-2015 12:43 pm

பருவம் பார்த்து வருவதில்லை
*****நட்பு *******
மனமும் குணமும் இணைவது தான்
*****நட்பு ******

மேலும்

அழகு தோழியே ! வாழ்த்துக்கள் ! 01-Jan-2015 4:49 pm
அழகு 01-Jan-2015 12:59 pm
நல் நட்புகூறும் நல் கவிதை தர்சி! 01-Jan-2015 12:50 pm
அழகு :) 01-Jan-2015 12:47 pm
krish vathani - கோபி சேகுவேரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2014 3:49 am

உன் விழி
விளிம்புகளில் என்னுயிரை
விட்டுச் செல்கிறேன்..

மேகங்கள் போல
தடயங்கள் இல்லாமலே
விட்டுச் செல்கிறேன்..

வரிகளே இல்லாத
மௌன கவிதயாய்
விட்டுச் செல்கிறேன்..

மேலும்

நன்றி நட்பே... 08-Dec-2014 12:41 pm
சூப்பர்..... 08-Dec-2014 11:23 am
நன்றி.. 04-Nov-2014 7:50 pm
krish vathani - S.Arivuselvan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2014 10:21 pm

உண்ண உணவு
உடுத்த உடை
இருக்க இடம்
இவைகளுள்
எவையுமின்றி
அகதியாய் நீ
அலையினும்
அகிலமே உன்னை
இகழினும்
உனக்கு நீ
உண்மையாய்
இருப்பின்
உன் வாழ்க்கை
அழகானதே.

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி..... 25-Aug-2014 9:37 pm
கருத்திற்கு மிக்க நன்றி..... 25-Aug-2014 9:37 pm
நன்று 25-Aug-2014 6:23 pm
நன்று நண்பரே 25-Aug-2014 6:06 pm
krish vathani - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2014 8:41 pm

ஓர் அழகிய பூவைக் கண்ட மனிதர்
அதை கையாளும் விதமோ பல....

வாசனையில் மயங்கி
பறித்து முகர்ந்து எறிவர்,

அதன் அழகில் மயங்கி
தன்னை அழகாக்க தலையில் சூடுவர்,

சம்பிரதாயம் என கூறி
பறித்து பாழ்படுத்துவர்,

இதழ் பறித்து
உண்டு மகில்பவரும் உளர்,

ஒரு சிலரே அழகாய்
அதன் போக்கில் ரசித்து மகிழ்வார்

ஓர் பூவையை காணும் விதம்
பலவாக மாறும்போது மட்டும்

கடவுளை குறை கூறும்
விந்தை மனிதரே!

பூவும் பூவையும் அவன் படைப்பில்
சமனாகும் போது....

உன் கேள்வியின் அர்த்தம் தான்....?

மேலும்

நன்றி 08-Sep-2014 3:26 pm
அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Sep-2014 1:57 pm
சிறப்பு 07-Sep-2014 12:26 pm
நன்று! 07-Sep-2014 7:54 am
krish vathani - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2014 8:23 pm

சோறு, பிட்டு, இட்லி
தோசை என நித்தமும் உண்டு
அலுத்து வெறுத்து
விதவிதமாய் சாப்பிட
ஏங்கி தவிப்பவர்களுக்குத்
தெரிவதில்லை.
பசி போக்கவே உணவுக்காக
ஏங்கும் பச்சிளம் பாலகர்கள் பலர்
இவ்வுலகில் உணவை காணவே
ஏங்கித் தவிக்கிறார்கள் என்று....

மேலும்

அருமை தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Sep-2014 2:02 pm
krish vathani - அரவிந்த்.C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2014 6:23 pm

நினைவுகள்....
சுகமான சுவடுகள்...
சில தருணம்
சுகமான சுமைகள்...
பகலும் இரவுமாய்,
சோகமும் சந்தோசமுமாய்,
கலந்ததோர் கலவை....

சில தருணங்களை நினைக்கையில்.
"கண்ணீரில் கசிந்து வெளி வரும்
ஒரு உறவின் உருவம்"

கடந்து வந்த பாதையின் கால்தடங்கள்,
ஒவ்வொருவருக்குள்ளும் புதைக்கப்பட்ட
பழைய நினைவுகள் மரமாய் முளைத்திடும் தருணம்,
வலியால் வெளிவரும் கண்ணீர் துளிகள்...

கனவுக்கும் நினைவுக்கும் உள்ள பாலம்.,,
பேசிய வார்த்தைகள்...
பழகிய நாட்கள்...
என்று சிறிது சிறிதாய் சேகரித்த
நினைவு பொக்கிஷங்கள்..
.
"தென்றலாய் புன்னகைத்த தருணம்,
புயலாய் சோகம் வீசிய தருணம்,
என இருவண்ணமும் புதைக்

மேலும்

நிதர்சனமான உண்மையான உணர்வுகள் நிறைந்த நினைவுகள் 29-Mar-2014 11:50 am
உங்கள் படைப்பு அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள். 11-Mar-2014 11:42 am
அருமை நண்பரே ! வாழ்த்துக்கள் ! 11-Mar-2014 11:14 am
அருமையான பதிவு நண்பரே , பரிசை வெல்ல வாழ்த்துக்கள் 11-Mar-2014 11:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ரா நவீன் குமார்

ரா நவீன் குமார்

திருத்தணி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

கரிசல் கவிஅன்பு

கரிசல் கவிஅன்பு

தமிழ்நாடு
user photo

rselvam

Seekarajapuram
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
மேலே