தப்பும் தவறும்

அடுத்தவர் வாழ்வில்
அடிவைக்கும் முன்
சிந்தித்து செயற்படாது - பின்

மனதார மன்னிப்பு வேண்டிடும்
தாங்கள் காரணங்கள் - என்றுமே
ரணத்திற்கு மருந்திடா...

புறக்கணிப்பின் வேதனை
தாங்கள் அறியததா?
காரணங்கள் எதுவானால் தான் என்ன?

இத்தவறுகள் இனி தொடரக்கூடாதவை தான்
தெரிவிக்கப்படததினாலேயே
பல தவறுகள் என்றுமே தப்புக்களாய்.....

எழுதியவர் : கிருஷ் (1-Aug-16, 12:55 pm)
Tanglish : thappum thavarum
பார்வை : 127

மேலே